ETV Bharat / state

'எடப்பாடி பேச்சை எந்த மடையனாவது நம்புவானா..?' - டிடிவி தினகரன் சரவெடி

தூத்துக்குடி: "திமுகவுக்கு  நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா..?"  என்று அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

author img

By

Published : May 16, 2019, 11:44 AM IST

File pic

இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் சுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி தினகரன் பரப்புரை

அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், "தமிழக மக்கள் துரோகிகளை எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்.கே நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கப்பட்டது. நான் வெற்றி பெற்றேன். அதேபோல் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இதனால் தோல்வி பயத்தில் திமுகவுக்கு நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா..?" என்று கேள்வி எழுப்பினார்.

இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் சுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

டிடிவி தினகரன் பரப்புரை

அப்போது, மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், "தமிழக மக்கள் துரோகிகளை எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்.கே நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கப்பட்டது. நான் வெற்றி பெற்றேன். அதேபோல் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இதனால் தோல்வி பயத்தில் திமுகவுக்கு நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா..?" என்று கேள்வி எழுப்பினார்.




தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து டிடிவி தினகரன் தூத்துக்குடி பிரச்சாரம் செய்தார்.

இவருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச் செயலாளரும் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன்  தூத்துக்குடி புதுக்கோட்டையில் சுந்தர்ராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கோரம்பள்ளம் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்தவர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் சுந்தர்ராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழக மக்கள் துரோகிகளை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் ஆர் கே நகரில் இரட்டை இலையை தோற்கடிக்கப்பட்டது. நான் வெற்றி பெற்றேன். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் 18 சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இதனால்  தோல்வி பயத்தில்  திமுகவுக்கு  நாங்கள் உதவி செய்வதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். இதை எந்த மடையனாவது நம்புவானா  என  என கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக போராட்டம் நடத்திய மக்களை 13 பேரை சுட்டுக் கொலை செய்தது அம்மாவுடைய அரசு என்றால் இப்படி நடந்திருக்குமா என்றார்.  மேலும்   மே 1ம்  தேதியை தொழிலாளர் தினம் கொண்டாடுவது போல் மே 23 ஆம் தேதி  வரும்  ஆண்டுகளில்  இளைஞர் சமுதாயம்  துரோகிகள் ஒழிப்பு  தினமாக கொண்டாடுவார்கள் என  அவர்  தெரிவித்தார்.

Visual FTP
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.