இந்தப் போட்டிகளை கபடி கழக தலைவர் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் எனப் இப்போட்டிகள் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி - ஓட்டப்பிடாரம் அணிகள் 60 - 17 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு கருங்குளம் அணியும், விளாத்திகுளம் அணிகள் மோதின. இதில் விளாத்திகுளம் அணி 25-16 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோப்பைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: குரும்பா சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை