ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நிலுவையிலுள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற ஒப்புதல்

author img

By

Published : Jul 8, 2021, 3:03 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்
சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையை ஏற்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்தது.

முதன்மை அமர்வுக்கு மாற்ற உத்தரவு

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மதுரைக் கிளையில் உள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’அனுமதிக்கப்பட்ட கால அளவை தாண்டி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஏற்க முடியாது’

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையை ஏற்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்தது.

முதன்மை அமர்வுக்கு மாற்ற உத்தரவு

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மதுரைக் கிளையில் உள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’அனுமதிக்கப்பட்ட கால அளவை தாண்டி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை ஏற்க முடியாது’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.