ETV Bharat / state

குடும்பத்தைக் கடத்தியதாகக் காவலர் மீது புகார் - கணவர் தர்ணா போராட்டம்! - தூத்துக்குடி தொழிலாளி தர்ணா போராட்டம்

தூத்துக்குடி: மனைவி, குழந்தைகளை கடத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலசுப்பிரமணியன்
author img

By

Published : Sep 21, 2019, 10:57 PM IST


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கும், ராமலெட்சுமி என்பவருக்கும் கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கல்பனாதேவி, தங்க திலகவதி, சுவேதா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரடிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரும் பாலசுப்பிரமணியனும் உறவினர்கள் ஆவர். கருப்பசாமி, மும்மலைப்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால், அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி அறிந்த பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசுப்பிரமணியன் காவல்துறையின் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின் சிறையில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியன், தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லமால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பாலசுப்பிரமணியன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி புகார் மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

போராட்டம் குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், "தனது மனைவி, குழந்தைகளுடன், வீட்டில் இருந்த 26 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள், ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை கருப்பசாமி எடுத்து சென்றுவிட்டார்.

கடந்த 8ஆம் தேதி அந்த கருப்பசாமியுடன், சில காவல் அலுவலர்கள் வந்து என்னைத் தாக்கினார். இதில் எனக்குத் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் 12ஆம் தேதி வரை சிகிச்சை பெற்றேன். ஆனால், மருத்துவமனை பதிவேட்டில் விபத்து சிகிச்சை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கியும், மேலும் விசாரணை நடத்தி, எனக்கு என் குடும்பத்தை கருப்புசாமிடம் இருந்து மீட்டும் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

பாலசுப்பிரமணியன் பேட்டி

இதையும் படியுங்க: குடியிருப்புப்பகுதி அருகே இருந்த ஆண் சடலத்தால் பரபரப்பு!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கும், ராமலெட்சுமி என்பவருக்கும் கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கல்பனாதேவி, தங்க திலகவதி, சுவேதா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரடிகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரும் பாலசுப்பிரமணியனும் உறவினர்கள் ஆவர். கருப்பசாமி, மும்மலைப்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதால், அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி அறிந்த பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலசுப்பிரமணியன் காவல்துறையின் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பின் சிறையில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியன், தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லமால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பாலசுப்பிரமணியன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் சமாதானப்படுத்தி புகார் மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

போராட்டம் குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், "தனது மனைவி, குழந்தைகளுடன், வீட்டில் இருந்த 26 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள், ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை கருப்பசாமி எடுத்து சென்றுவிட்டார்.

கடந்த 8ஆம் தேதி அந்த கருப்பசாமியுடன், சில காவல் அலுவலர்கள் வந்து என்னைத் தாக்கினார். இதில் எனக்குத் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் 12ஆம் தேதி வரை சிகிச்சை பெற்றேன். ஆனால், மருத்துவமனை பதிவேட்டில் விபத்து சிகிச்சை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கியும், மேலும் விசாரணை நடத்தி, எனக்கு என் குடும்பத்தை கருப்புசாமிடம் இருந்து மீட்டும் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

பாலசுப்பிரமணியன் பேட்டி

இதையும் படியுங்க: குடியிருப்புப்பகுதி அருகே இருந்த ஆண் சடலத்தால் பரபரப்பு!

Intro:மனைவி, குழந்தைகளை கடத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிBody:
தூத்துக்குடி


தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நகை ஆகியவற்றை காவல்துறை உதவி ஆய்வாளர் அபகரித்து கொண்டதாகவும், அவர்களை மீட்டு தர வலியுறுத்தியும் தொழிலாளி ஒருவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு தர்ணா போரர்ட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலி தொழிலாளியான இவருக்கும், அவருடைய சகோதரி மகள் ராமலெட்சுமிக்கு என்பவருக்கும் கடந்த 1997ம் ஆண்டும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு கல்பனாதேவி, தங்கதிலகவதி, சுவேதா என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரடிகுளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. காவல்துறையில் உதவி ஆய்வாளராக உள்ளார். இவருடைய மகளை பாலசுப்பிரமணியன் உறவினருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் உறவினரான கருப்பசாமி, பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் உதவி ஆய்வாளர் கருப்பசாமி மும்மலைப்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் மாறுதலாகி வந்ததும், அடிக்கடி பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், உதவி ஆய்வாளர் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இதற்கு பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவிக்கவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாலசுப்பிரமணியன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் 04.02.19 அன்று மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பாலசுப்பிரமணியன் அவருடைய வீட்டிற்கு சென்றார். ஆனால் வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லமால் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக மீண்டும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பாலசுப்பிரமணியன் போர்வையை விரித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் சமதானப்படுத்தி புகார் மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டடத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

போராட்டம் குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
தனது மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்த 26 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுர்ந்த பொருட்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டார். கடந்த 8-ம் தேதி அந்த உதவி ஆய்வாளர் கருப்பசாமி மற்றொரு அதிகாரியுடன் வந்து என்னை தாக்கினார். இதில் நான் தலைமையில் காயமடைந்து கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றேன். ஆனால், மருத்துவமனை பதிவேட்டில் விபத்து சிகிச்சை என பதிவு செய்யப்பட்டுள்ளது.எனக்கு போலீஸாரால் பல கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, உரிய விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும், என்றார்.
இந்த சம்பவத்தால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : பாலசுப்பிரமணியன்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.