ETV Bharat / state

50 பேர் மீது வழக்குப் போடுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? - திருநாவுக்கரசர்

author img

By

Published : Oct 5, 2019, 9:26 PM IST

தூத்துக்குடி: நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 50 பேர் மீது வழக்குப் போடுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

thirunavukkarasu

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி முழுமையான சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்கு போடுவது கண்டனத்திற்குரியது. இது கருத்து சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல் ஆகும். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது என்றால் இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமரை விமர்சித்த திருநாவுக்கரசர்

தொடர்ந்து பேசுகையில், தேர்தல் என்பது வியாபாரமாகி விட்டது. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இன்னும் தேர்தலில் நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தேர்தலின் போது காவல்துறையின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறினார்.

மேலும், அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலேயே வெற்றிடம் என்பது கிடையாது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரின் அரசியல் பிரவேசம் குறித்து கராத்தே தியாகராஜன் விமர்சிப்பது தேவையற்றது என்றார்.

இதையும் படிங்க: ‘பேனர் வைப்பதில் காட்டும் மும்முரத்தை நீட் விவகாரத்தில் காட்டியிருக்கலாம்’ - கனிமொழி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி முழுமையான சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்கு போடுவது கண்டனத்திற்குரியது. இது கருத்து சுதந்திரத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல் ஆகும். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது என்றால் இது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமரை விமர்சித்த திருநாவுக்கரசர்

தொடர்ந்து பேசுகையில், தேர்தல் என்பது வியாபாரமாகி விட்டது. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இன்னும் தேர்தலில் நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தேர்தலின் போது காவல்துறையின் உதவியுடன் பணப்பட்டுவாடா நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறினார்.

மேலும், அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலேயே வெற்றிடம் என்பது கிடையாது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரின் அரசியல் பிரவேசம் குறித்து கராத்தே தியாகராஜன் விமர்சிப்பது தேவையற்றது என்றார்.

இதையும் படிங்க: ‘பேனர் வைப்பதில் காட்டும் மும்முரத்தை நீட் விவகாரத்தில் காட்டியிருக்கலாம்’ - கனிமொழி

Intro:பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? - திருநாவுக்கரசர் எம்பி கேள்வி
Body:

தூத்துக்குடி


நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து பேசினார். அப்போது,

மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் பிஜேபி அரசு ஏராளமான வாக்குறுதிகளை அளித்து இதுவரை எந்த வாக்குறுதியையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை. நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இல்லை, புதிய தொழில் வாய்ப்புகள் கிடையாது, எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் விதமாகவும், பாஜக பினாமி அரசாகவும், ஊழல் அரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டும் விதமாகவும் மக்கள் இந்த நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் எதுவும் வரபோவதில்லை. இருந்தாலும் மக்கள் ஆட்சிகளை எடை போடக்கூடிய தேர்தல் இது. ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை கண்டிக்கக் கூடிய விதத்தில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.

2-வது முறையாக மத்தியில் ஆளும் பொறுப்பை ஏற்றபின் பிரதமர் மோடி முழுமையாக சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்கு போடுவது என்பது கண்டனத்திற்குரியது.
இது கருத்து சுதந்திரத்தின் மீது நடக்கிற தாக்குதல். ஜனநாயகத்தின் மீது நடக்கிற தாக்குதல். எனவே அரசுக்கு எதிராக தங்களின் அபிப்பிராயங்களை சொல்லக்கூடிய கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக வழக்கு போடுவது என்றால் இது ஜனநாயகமா? அல்லது சர்வாதிகாரமா?.

தமிழ்நாட்டில் மண் அள்ளுவது, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என எல்லா துறைகளிலும் 15 முதல் 18 சதவீதம் வரை கமிஷன்கள் இல்லாமல் வேலை நடைபெறுவதில்லை. ஆகவே எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கின்ற அரசாக தமிழக அரசு விளங்குகிறது.
இதிலிருந்து பிஜேபிக்கும் பங்கு போகிறது. அதிமுகவின் பங்குதாரராக தான் பாஜக செயல்படுகிறது. அதனால் மத்திய அரசும் ஊழலை கண்டு கொள்வதில்லை. இதற்கான பாடத்தை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்.

தற்போது தேர்தல் நடைமுறைகள் மாறிக்கொண்டு வருகிறது. தேர்தல் என்பது வியாபாரமாகி விட்டது. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இன்னும் தேர்தலில் நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். தேர்தலின்போது போலீசாரின் உதவியுடன் பணம் பட்டுவாடா நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அரசியலில் மட்டுமல்ல இயற்கையிலேயே வெற்றிடம் என்பது கிடையாது. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரின் அரசியல் பிரவேசம் குறித்து கராத்தே தியாகராஜன் விமர்சிப்பது தேவையற்றது. ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால் தற்பொழுது அசுத்தமான ரயில்நிலையங்களாக கண்டறியப்பட்டுள்ளவற்றை சுத்தம் செய்யவும், சரிசெய்யவும் ரயில்வே துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தென்னக ரயில்வே பொதுமேலாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை பொறுத்து அப்பாவு வெற்றி பெறுவார் என தோன்றுகிறது. ஆனால் இதனை நீதிமன்றமே உறுதி செய்ய முடியும். விரைவில் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டும்.

சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்புக்கு டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் வரவேற்பு பேனர்கள் எதுவும் வைக்கவேண்டாம் என பிரதமர் மோடி சொல்லியிருந்தால் அது பாராட்டத்தக்க விஷயமாக இருக்கும். ஆனால் அவ்வாறு அவர் சொல்லவில்லை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.