ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Oct 1, 2019, 8:27 AM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வருமானம் இன்றி இருப்பதாகவும், ஆகவே உடனடியாக ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியதையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இந்த ஆலையை மூடியது தொடர்பாக ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டபிடாரம், புதியம்புத்தூர், காயலூரணி, ஒட்டநத்தம், சாமிநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வருவாயிழந்து மிகவும் சிரமப்படுகிறோம் எனவும் உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராளியை ரவுடி பட்டியலில் சேர்த்த காவல் துறை


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதாக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியதையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இந்த ஆலையை மூடியது தொடர்பாக ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டபிடாரம், புதியம்புத்தூர், காயலூரணி, ஒட்டநத்தம், சாமிநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வருவாயிழந்து மிகவும் சிரமப்படுகிறோம் எனவும் உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் போராளியை ரவுடி பட்டியலில் சேர்த்த காவல் துறை

Intro:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பல ஆயிரம் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்- உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை வேண்டும் கிராமத்தினர் பேட்டிBody:


தூத்துக்குடி


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதாக மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தை தொடர்ந்து இந்த ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இந்த ஆலையை மூடியது தொடர்பாக ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து,வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து மாவட்ட ஆட்சிதலைவரிடம் பலர் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஓட்டபிடாரம்,புதியம்புத்தூர், காயலூரணி,ஒட்டநத்தம்,சாமிநத்தம் உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.இது குறித்து பேட்டியளித்த மோகன் என்பவர் கூறுகையில் இந்த ஆலையில் நான் கடந்த 22 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். இந்த ஆலையால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த ஸ்டெர்லைட் ஆலைமூடப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்துள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளோம். குடும்பம் நடத்தமுடியாத சூழ்நலை உள்ளது. இங்குள்ள ஆலையை திறக்கு முடியாத தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க  வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என குற்றம் சாட்டினார். எனவே ஆலையை திறக்க உடனடியாக நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.