ETV Bharat / state

வெள்ள பாதிப்பு ஆய்வுக்கு வந்த அமைச்சர் உதயநிதி காரை மறித்து ஆர்ப்பாட்டம்! காயல்பட்டினத்தில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 12:35 PM IST

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி: குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. அந்த வகையில், திருச்செந்தூரில் உள்ள காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இங்கு பெய்த கனமழையால் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93 செ.மீ மழை பதிவானது. இதனால் காயல்பட்டினம் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயல்பட்டினம் வந்தார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதனையடுத்து, நிவாரண பொருட்கள் வழங்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழையால் மாவட்டம் முழுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் நிவாரண பொருட்கள் வழங்குவதாக பொது மக்கள் கூறினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுவதும் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து திரும்பி சென்றார்.

இதையும் படிங்க: "பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி: குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. அந்த வகையில், திருச்செந்தூரில் உள்ள காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இங்கு பெய்த கனமழையால் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 93 செ.மீ மழை பதிவானது. இதனால் காயல்பட்டினம் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயல்பட்டினம் வந்தார். அவருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதனையடுத்து, நிவாரண பொருட்கள் வழங்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கனமழையால் மாவட்டம் முழுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் நிவாரண பொருட்கள் வழங்குவதாக பொது மக்கள் கூறினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுவதும் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து திரும்பி சென்றார்.

இதையும் படிங்க: "பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டரீதியாக சந்திப்போம்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.