ETV Bharat / state

பேய்குளம் மகேந்திரன் வழக்கு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை!

author img

By

Published : Jul 23, 2020, 10:12 AM IST

தூத்துக்குடி: சட்டவிரோத காவலில் பேய்குளம் மகேந்திரன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

cbcid
cbcid

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த மே 18ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார்.

மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். 2 நாள்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதியில்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் இதனைத்தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செம்மறி ஆடு திருடர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த மே 18ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார்.

மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். 2 நாள்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால், அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதியில்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் இதனைத்தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செம்மறி ஆடு திருடர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.