ETV Bharat / state

சட்டவிரோதமாக கள் விற்பனை செய்தவர் கைது - தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி: புதுக்குடி கண்மாய் அருகே சட்டவிரோதமாக கள் விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
author img

By

Published : May 25, 2021, 10:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் காவல் துறையினர் இன்று (மே.25) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சன்னத்து புதுக்குடி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த சுப்பையா, சன்னத்து புதுக்குடி கண்மாய் அருகே வாழைத் தோட்டத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் காவல் துறையினர் இன்று (மே.25) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சன்னத்து புதுக்குடி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த சுப்பையா, சன்னத்து புதுக்குடி கண்மாய் அருகே வாழைத் தோட்டத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.