ETV Bharat / state

மெர்கன்டைல் வங்கியின் இலக்கு இத்தனை கோடியா? - வங்கியின் தலைவர் தகவல் - Thoothukudi District News

தூத்துக்குடி: வருங்காலத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிகர லாபத்தின் இலக்காக 360 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வங்கி தலைவர் அண்ணாமலை
author img

By

Published : Nov 12, 2019, 11:28 PM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 98ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, தூத்துக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
வங்கித் தலைவர் அண்ணாமலை, ”மெர்கன்டைல் வங்கி 2019-20ஆம் அரை நிதியாண்டில் வங்கி வணிகத்தில் 11.70 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 60 ஆயிரத்து 852 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குத் தொகைகள் 14.40 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 8 ஆயிரத்து 728 கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம் வங்கியின் நிகர லாபம் 151 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும்‌ 141 விழுக்காடு அதிகமாகும்.

இது தவிர வங்கியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தொழிற்கடன், பெண்களுக்கான தொழிற்கடன் உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

வங்கி தலைவர் அண்ணாமலை பேட்டி

மேலும் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையிலுள்ள அனைத்து கிளைகளிலும் கணினி மயமாக்கப்பட்ட காசு கையாளும் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். வருங்காலத்தில் வணிக இலக்கு ரூ.72 ஆயிரத்து 500 கோடியாகவும், சேமிப்புத் தொகை ரூ.41 ஆயிரம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.360 கோடியாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 98ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, தூத்துக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
வங்கித் தலைவர் அண்ணாமலை, ”மெர்கன்டைல் வங்கி 2019-20ஆம் அரை நிதியாண்டில் வங்கி வணிகத்தில் 11.70 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 60 ஆயிரத்து 852 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குத் தொகைகள் 14.40 விழுக்காடு அளவு வளர்ச்சியடைந்து, 8 ஆயிரத்து 728 கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம் வங்கியின் நிகர லாபம் 151 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும்‌ 141 விழுக்காடு அதிகமாகும்.

இது தவிர வங்கியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தொழிற்கடன், பெண்களுக்கான தொழிற்கடன் உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

வங்கி தலைவர் அண்ணாமலை பேட்டி

மேலும் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையிலுள்ள அனைத்து கிளைகளிலும் கணினி மயமாக்கப்பட்ட காசு கையாளும் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். வருங்காலத்தில் வணிக இலக்கு ரூ.72 ஆயிரத்து 500 கோடியாகவும், சேமிப்புத் தொகை ரூ.41 ஆயிரம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.360 கோடியாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:சிட்டி யூனியன் வங்கி அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை தாக்கல்..!

Intro:தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.360 கோடியாக இலக்கு நிர்ணயம் - வங்கி தலைவர் அண்ணாமலை பேட்டி
Body:

தூத்துக்குடி


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98-ம் ஆண்டு நிறுவனர் தினத்தையொட்டி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது வங்கி தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2019-2020 ஆண்டு அரை நிதியாண்டில் வங்கி வணிகத்தில் 11.70% வளர்ச்சியடைந்து ரூ.60 ஆயிரத்து 852 கோடியை எட்டியுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை 14.40% வளர்ச்சியடைந்து 8 ஆயிரத்து 728 கோடியாக உள்ளது. இதனால் கிடைக்கப்பெற்ற வங்கியின் நிகர லாபம் 151 கோடியாகும். இது கடந்த ஆண்டை காட்டிலும்‌ 141% அதிகம்.
இதுதவிர வங்கியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தொழிற்கடன், பெண்களுக்கான தொழிற்கடன் உள்பட பல வளர்ச்சி பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட காசு கையாளும் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். புதிதாக 29 இ-லாபி மையங்கள், புதிய சில்லரை வர்த்தக கடன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் வணிக இலக்கு ரூ.72, 500 கோடியாகவும், சேமிப்பு தொகை ரூ. 41 ஆயிரம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.360 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.