ETV Bharat / state

பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்ததே பாதிப்புக்குக் காரணம் - கனிமொழி

author img

By

Published : Dec 2, 2019, 7:31 AM IST

Updated : Dec 2, 2019, 10:16 PM IST

தூத்துக்குடி: திமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தியிருந்தாலே இந்த‌ விளைவு ஏற்பட்டிருக்காது என்று மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட கனிமொழி எம்.பி., கூறியுள்ளார்.

kanimozhi mp
kanimozhi mp

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கனிமொழியிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் கனிமொழி எம்பி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடியில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதில் வெள்ளத்தை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்காலிகமாக கூடுதல் நிவாரண முகாம்கள் அமைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெறச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kanimozhi mp

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி இருந்தாலே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அதனாவேயே இந்த விளைவு ஏற்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கனிமொழியிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் கனிமொழி எம்பி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடியில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதில் வெள்ளத்தை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்காலிகமாக கூடுதல் நிவாரண முகாம்கள் அமைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெறச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kanimozhi mp

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி இருந்தாலே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அதனாவேயே இந்த விளைவு ஏற்பட்டுள்ளது என்றார்.

Intro:திமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தியிருந்தாலே இந்த‌விளைவு ஏற்பட்டிருக்காது - மழைவொள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட கனிமொழி எம்பி பேட்டி
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளான எழில்நகர், கோவில் பிள்ளைவிளை, குமரன் நகர், லூர்தம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் சிலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கனிமொழி எம்பியிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகர ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் கனிமொழி எம்பி ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

தூத்துக்குடியில் யாரும் எதிர்பாராதவிதமாக அதிகப்படியான அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில் வெள்ளத்தை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். தற்காலிகமாக கூடுதல் நிவாரண முகாம்கள் அமைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெறச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி இருந்தாலே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே இந்த விளைவு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.


இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், தமிழகத்திலேயே அதிகப்படியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் நீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான நீர் உறிஞ்சும் இயந்திரங்களும், தனியாருக்கு சொந்தமான 10 நீர் உறிஞ்சும் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழை குறைவாக பதிவாகி உள்ள இடங்களில் இருந்தும் மீட்பு வாகனங்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பாதிக்கப் படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 37 இடங்களில் உள்ள மக்களின் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.Conclusion:
Last Updated : Dec 2, 2019, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.