ETV Bharat / state

ஆட்சிக்காலத்தில் செய்யாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் - கனிமொழி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி: ஆட்சிக்காலத்தில் செய்யாமல் விட்டுவிட்டு தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் என அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

author img

By

Published : Mar 20, 2019, 4:41 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தொகுதி முழுவதும் தனது பிரச்சாரத்தை துவங்கி விட்ட நிலையில் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, " நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் விபத்து ஏற்பட்டால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விடும். பாஜக என்ன நினைக்கிறதோ அதை செய்கிற ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் செய்யாததை மீண்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட நகைச்சுவை வேறு இருக்கமுடியாது. முழுக்க முழுக்க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பாக வாழ மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் ஸ்டாலினும் ஆட்சிப்பொறுப்பிற்கு வரவேண்டும்", என கூறினார்.


நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தொகுதி முழுவதும் தனது பிரச்சாரத்தை துவங்கி விட்ட நிலையில் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, " நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் விபத்து ஏற்பட்டால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விடும். பாஜக என்ன நினைக்கிறதோ அதை செய்கிற ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் செய்யாததை மீண்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட நகைச்சுவை வேறு இருக்கமுடியாது. முழுக்க முழுக்க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பாக வாழ மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் ஸ்டாலினும் ஆட்சிப்பொறுப்பிற்கு வரவேண்டும்", என கூறினார்.



தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக காரியாலய திறப்பு விழா ஓட்டப்பிடாரம் தொகுதி ஸ்பிக் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி பங்கேற்று காரியாலயத்தில் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர்,  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவதில்லை. ஒருவேளை பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் ஏற்ப்பட்டால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விடும். தமிழ்நாட்டில், பாஜக என்ன சொல்ல நினைக்கிறதோ அதை செய்கிற ஆட்சி நடக்கிறது.

திமுக தேர்தல்  அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதே போல்
அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார். 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் செய்யாததை மீண்டும் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே இதைவிட நகைச்சுவை வேறு இருக்கமுடியாது. ஆகவே முழுக்க முழுக்க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.

நாட்டை கப்பற்ற, மக்களை காப்பாற்ற, ஜனநாயகத்தை நிலைநாட்டிட, ஸ்டெர்லைட் கலவரத்தில் இறந்த 13 பேரின் இறப்புக்கு நியாயம் கிடைக்க, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும்  என கூறினார்..


Visual in rep app. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.