ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சரின் பதில்!

author img

By

Published : Dec 21, 2019, 1:47 PM IST

தூத்துக்குடி: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது என்று ரஜினி கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

rajini
rajini

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, கோவில்பட்டி பகுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகேட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவுள்ளார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், கரடிகுளம், துரைச்சாமிபுரம், துலுக்கர்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு வாகனத்தில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு கிராம பகுதிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அந்தச் சாதனையை முன்னிறுத்தி வாக்கு சேகரித்துவருகிறோம். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”ஒரு பிரச்னையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தோடு அணுகுவார்கள். தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம் நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை அதற்காகத்தான் உள்ளன. ஆனால், மக்கள் உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு கொண்டு சென்று மக்களைத் திசை திருப்புவதை எந்த அரசியல் கட்சி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம்: வன்முறை ஒரு தீர்வு ஆகாது - ரஜினிகாந்த்

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, கோவில்பட்டி பகுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகேட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவுள்ளார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், கரடிகுளம், துரைச்சாமிபுரம், துலுக்கர்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு வாகனத்தில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு கிராம பகுதிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அந்தச் சாதனையை முன்னிறுத்தி வாக்கு சேகரித்துவருகிறோம். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”ஒரு பிரச்னையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தோடு அணுகுவார்கள். தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம் நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவை அதற்காகத்தான் உள்ளன. ஆனால், மக்கள் உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு கொண்டு சென்று மக்களைத் திசை திருப்புவதை எந்த அரசியல் கட்சி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம்: வன்முறை ஒரு தீர்வு ஆகாது - ரஜினிகாந்த்

Intro:தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது - நடிகர் ரஜினி கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பதில்Body:தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது - நடிகர் ரஜினி கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பதில்

தூத்துக்குடி


தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று நடிகர் ரஜினி கருத்துக்கு பதில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் 27,30 இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவது நேற்றுடன் முடிவு பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் செ.ராஜீ அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, கரடிகுளம், துரைச்சாமிபுரம், துலுக்கர்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு வாகனத்தில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
கழுகுமலை அருகே உள்ள கரடி குளத்தில் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அக்கிராம மக்கள் அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி , வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்
தமிழக அரசு கிராம பகுதிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறது,அந்த சாதனையை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறோம்,செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு தருகின்றனர்,தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவோம்,அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்றார்.

குடியுரிமை சட்டம் பிரச்சினைகள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு , அமைச்சர் பதில் கூறுகையில் ஒரு பிரச்சனையில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தோடு அணுகுவார்கள், தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது,நாங்கள் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், குடியுரிமை தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது,போராட்டங்களை மத்திய அரசு கவனித்து வருகிறது, அதில் சட்டம் திருத்தம் கொண்டு வரலாம்,கருத்து சொல்வது அனைவரின் உரிமை,மக்கள் உணர்வுகளை தூண்டுகிற பிரச்சினைகளில் அரசியலாக்க கூடாது என்பதுதான் எங்கள் கருத்து,ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம்,மக்கள் மன்றம் என்றழைக்கப்படும் நாடாளுமன்றம், சட்டமன்றம் அதற்காகத்தான் உள்ளது.அதில் விவாதிக்கலாம், ஆனால் மக்கள் உணர்வுகளை தூண்டி, வன்முறைக்கு கொண்டு சென்று மக்களை திசை திருப்புவதை எந்த அரசியல் கட்சி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்றார்

பேட்டி : அமைச்சர் கடம்பூர் செ.ராஜுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.