ETV Bharat / state

"பெரியாரை அவதூறாக பேசியதற்கு ரஜினி உரிய விலை கொடுப்பார்" - கி.வீரமணி

author img

By

Published : Jan 20, 2020, 6:14 PM IST

தூத்துக்குடி: "பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் கி.வீரமணி பேட்டி
தூத்துக்குடியில் கி.வீரமணி பேட்டி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையை உருவாக்கி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை கலைத்துள்ளனர். இதனால் ஏழு பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்காவது விலக்கு கொடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டங்கள் இருந்தும்கூட அதை பொருட்படுத்தாமல் நீட் தேர்வை புகுத்தினர்" என்றார்.

தூத்துக்குடியில் கி.வீரமணி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு மூலம் பல ஊழல்களும் ஆள்மாறாட்டங்களும் நடக்கின்றன. நீட் தேர்வு விலக்குக்கு இரண்டு முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு எந்த விளக்கமும் தரவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால் கல்வி இடைநிற்றல் அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார்” என்றார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த பரப்புரை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையை உருவாக்கி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை கலைத்துள்ளனர். இதனால் ஏழு பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்காவது விலக்கு கொடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டங்கள் இருந்தும்கூட அதை பொருட்படுத்தாமல் நீட் தேர்வை புகுத்தினர்" என்றார்.

தூத்துக்குடியில் கி.வீரமணி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு மூலம் பல ஊழல்களும் ஆள்மாறாட்டங்களும் நடக்கின்றன. நீட் தேர்வு விலக்குக்கு இரண்டு முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு எந்த விளக்கமும் தரவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால் கல்வி இடைநிற்றல் அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார்” என்றார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

Intro:பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் - தி.க. தலைவர் கீ.வீரமணி பேட்டிBody:பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் - தி.க. தலைவர் கீ.வீரமணி பேட்டி

தூத்துக்குடி


நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் பயணம் தொடக்க நிகழ்ச்சிக்காக திராவிடர் இயக்க தலைவர் கீ. வீரமணி விமானம் மூலம் தூத்துக்குடி வந்திருந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேட்டி அளிக்கையில்,
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக்கல்வி சேர்க்கைக்கு நீட்தேர்வு எழுதவேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகள் மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. இதனால் 7 பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வில் குறைந்தபட்சம் தமிழகத்திற்காகவது விலக்கு கொடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டங்கள் இருந்தாலும் கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீட்தேர்வு தான் சிறந்தது எனக் கூறி மீண்டும் மீண்டும் நீட் தேர்வை தமிழகத்தில் புகுத்த முயற்சிக்கிறார்கள். இதில் பல ஊழல்கள் நடந்திருக்கின்றன.
ஆள்மாறாட்டங்கள் நடந்திருக்கின்றன. பல கோடி ரூபாய் ஊழல் செய்து கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கிறார்கள். முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்குக்கு 2 முறை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு எந்த விளக்கமும் உரிய முறையில் தரவில்லை. எல்லா விஷயத்திலும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு தலையாட்டி கொண்டிருக்கும் தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். தற்பொழுது 5, 8, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் கொண்டு வரமுயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் மீண்டும் குலக்கல்வி முறையை அமல்படுத்த முயற்சிக்கிறது. இதனால் கல்வி இடைநிற்றல் அதிகமாகும் சூழ்நிலை உள்ளது.

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு நடிகர் ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேரின் கதி என்ன? என கேள்வி கேட்டதற்கு எந்த 7 பேர் என பதில் அளித்த மிகப்பெரிய அரசியல் ஞானி. எனவே அவர் முழு நேர அரசியலுக்கு வந்தால் அவருடைய பேச்சும், அறிவும் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒன்றே போதும் என பதிலளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.