ETV Bharat / state

மனைவி பிரிந்துபோன சோகத்தில் கணவர் தற்கொலை - Thoothukudi latest news

கோவில்பட்டி அருகே மனைவி பிரிவை தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பசாமி
கருப்பசாமி
author img

By

Published : Jul 29, 2021, 10:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) கருப்பசாமி (35). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்உள்ளனர்.

கருப்பசாமியுடன் நீண்ட நாள்களாக தகராறு இருந்துவந்ததால், முத்துலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமி, மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் துறையினர், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) கருப்பசாமி (35). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்உள்ளனர்.

கருப்பசாமியுடன் நீண்ட நாள்களாக தகராறு இருந்துவந்ததால், முத்துலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமி, மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் துறையினர், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.