ETV Bharat / state

‘தண்ணீர் பிரச்னைக்கு அரசு நிரந்தரத் தீர்வு அளிக்கவில்லை’ - கனிமொழி எம்.பி - அரசு நிரந்தர தீர்வு

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு எந்த நிரந்தர நடவடிக்கையும் ஏற்படுத்தவில்லை என கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

கனிமொழி எம்.பி
author img

By

Published : Jun 14, 2019, 10:13 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க உள்ளோம். அதேபோல், அனைத்து இடங்களிலுமே தண்ணீர் பிரச்னை உள்ளது. இதற்கு அரசு நிரந்தர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குடிநீருக்காக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தத் திட்டங்களை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்னை பெரும் அளவுக்கு குறைந்துவிடும். அதிமுகவை என்றுமே நாங்கள் திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் திராவிட இயக்கத்தின் எந்த கருத்துக்களிலும் நம்பிக்கை இல்லாமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க உள்ளோம். அதேபோல், அனைத்து இடங்களிலுமே தண்ணீர் பிரச்னை உள்ளது. இதற்கு அரசு நிரந்தர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குடிநீருக்காக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்தத் திட்டங்களை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்னை பெரும் அளவுக்கு குறைந்துவிடும். அதிமுகவை என்றுமே நாங்கள் திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் திராவிட இயக்கத்தின் எந்த கருத்துக்களிலும் நம்பிக்கை இல்லாமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Intro:தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த நிரந்தர தீர்வையும் ஏற்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டுBody:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். குறுக்குச் சாலையில் தொடங்கிய அவர், மீனாட்சிபுரம், பசுவந்தனை, தீத்தாம்பட்டி, அச்சங்குளம், குருவிநத்தம், காமநாயக்கன்பட்டி, துறையூர், சிவந்திபட்டி, கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு, நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, வானரமுட்டி, கழுகுமலை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து கனிமொழி எம்பி நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க உள்ளோம். அனைத்து இடங்களிலுமே தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதற்கு அரசு நிரந்தர தீர்வு எதுவும் காணாத நிலை உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினையை நாம் பெரிய அளவுக்கு குறைக்கலாம்.

அதிமுகவை என்றுமே நாங்கள் திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை. திராவிட இயக்கத்தின் எந்தக் கருத்துக்களிலும் நம்பிக்கை இல்லாமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அதிமுகவை திராவிட இயக்கம் என்று யாருமே ஏற்றுக் கொண்டதில்லை, என்றார் அவர்.

பின்னர் பாண்டவர்மங்கலத்தில் கனிமொழி எம்பி மக்களிடம் பேசுகையில்
திமுக மீதும் என் மீதும் நம்பிக்கை வைத்து, நீங்கள் எங்களுக்கு அளித்திருகக்கக்கூடிய அன்பான ஆதரவிற்கு, உங்களுடைய மேலான வாக்குகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு இருக்ககூடிய மக்களுக்கு பல கோரிக்கைகள் இருக்கிறது. முதியோர் விதவை உள்ளிட்ட அரசு உதவித் தொகைகள் வரவில்லை என்றும், அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா இடத்திலும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். விரைவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உங்களுடைய மனுக்களை அவரிடம் வழங்கி இதைச் செய்ய வேண்டும் என்று நிச்சயமாக நான் வலியுறுத்துவேன், விரைவிலேயே திராவிட கழக ஆட்சி இங்கு வந்து விடும், அப்போது நமது கோரிக்கையை இன்னும் விரைவாக நிறைவேற்ற முடியும், பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய ஒருவராக பணியாற்றுவேன். இங்கு கூடிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உங்களோடு நின்று பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்றார்

முன்னதாக கனிமொழி எம்பி அங்கு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் உடனிருந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.