ETV Bharat / state

”மீனவர்களுக்கு மூன்று மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை”

author img

By

Published : Jun 13, 2021, 12:18 PM IST

மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால் உள்ளூர் கூட்டுறவு அமைப்புகள் உத்திரவாதத்துடன் மூன்று மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Fishing machines were provided by Minister Anita Radhakrishnan
Fishing machines were provided by Minister Anita Radhakrishnan

தூத்துக்குடி: மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்பிடி இயந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளம் - மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான இயந்திரங்களை வழங்கினார்.

மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பின்னர் பேசிய அவர், ”சென்னையில் உள்ளதை போல தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு படகுகளையும் பாதுகாப்பான முறையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால், ஏழு ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரது குடும்பத்திற்கு ஏதாவது அரசு இழப்பீடுகள் கிடைக்கும் என்பதை மாற்றி உள்ளுர் கூட்டுறவு அமைப்புகள் உத்திரவாதத்துடன் மூன்று மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிநகர் மீனவர் கிராம பகுதியில் 43 கோடி ரூபாய் மதிப்பிலும், சிங்கிதுறை, கொம்புதுறை மீனவர் கிராமங்களில் 28 கோடி ரூபாய் மதிப்பிலும், இனிகோ நகர் மீனவர் கிராம பகுதியில் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலும், விவேகானந்தர் மீனவர் காலணி பகுதியில் 2.70 கோடி ரூபாய் மதிப்பிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மேலும், தூத்துக்குடியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிட்டில் ஒருங்கிணைந்த மீன்வள அலுவலகம் கட்டும் பணிக்கும், மணப்பாடு மீனவர் கிராமத்தில் 3.11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிதாக மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் பயன்படுத்தும் டீசல், மண்ணெண்ணெய் வழங்கும் அளவினை அதிகரித்து தரப்படும் என அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்செந்தூர், காயாமொழி, ஆலந்தலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நல திட்டங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

தனியாருக்குச் சொந்தமான குவாரியில் அலுவலர்கள் ஆய்வு: வாகனங்கள் பறிமுதல்!

தூத்துக்குடி: மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்பிடி இயந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளம் - மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான இயந்திரங்களை வழங்கினார்.

மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பின்னர் பேசிய அவர், ”சென்னையில் உள்ளதை போல தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு படகுகளையும் பாதுகாப்பான முறையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால், ஏழு ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரது குடும்பத்திற்கு ஏதாவது அரசு இழப்பீடுகள் கிடைக்கும் என்பதை மாற்றி உள்ளுர் கூட்டுறவு அமைப்புகள் உத்திரவாதத்துடன் மூன்று மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிநகர் மீனவர் கிராம பகுதியில் 43 கோடி ரூபாய் மதிப்பிலும், சிங்கிதுறை, கொம்புதுறை மீனவர் கிராமங்களில் 28 கோடி ரூபாய் மதிப்பிலும், இனிகோ நகர் மீனவர் கிராம பகுதியில் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலும், விவேகானந்தர் மீனவர் காலணி பகுதியில் 2.70 கோடி ரூபாய் மதிப்பிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீன்பிடி இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மேலும், தூத்துக்குடியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிட்டில் ஒருங்கிணைந்த மீன்வள அலுவலகம் கட்டும் பணிக்கும், மணப்பாடு மீனவர் கிராமத்தில் 3.11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிதாக மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் பயன்படுத்தும் டீசல், மண்ணெண்ணெய் வழங்கும் அளவினை அதிகரித்து தரப்படும் என அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்செந்தூர், காயாமொழி, ஆலந்தலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நல திட்டங்களை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

தனியாருக்குச் சொந்தமான குவாரியில் அலுவலர்கள் ஆய்வு: வாகனங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.