ETV Bharat / state

அமைச்சர் நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கூச்சலிட்டதால் பரபரப்பு!

தூத்துக்குடி: மீனவர் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், குறைதீர் கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை என முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கேள்வி எழுப்பியதை, அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Jul 6, 2019, 4:51 PM IST

அமைச்சர் நிகழ்ச்சியில் பரபரப்பு

மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மீனவர்களுக்கு 100 விழுக்காடு மானியத்துடன் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைத்தொடர்புக் கருவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின், இடையே தருவைகுளம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மகாராஜன் என்பவர், "மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இது நாள் வரையில் ஏன் நடத்தப்படவில்லை" என ஆவேசமாகச் சத்தமிட்டார். அவரின், இத்தகைய பேச்சினை கண்டித்து அமைச்சரின் ஆதரவாளர்களும் பதிலுக்குச் சத்தமிட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கூச்சலிட்டதால் பரபரப்பு

இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் நிகழ்ச்சியினை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர்கள் மேரி பிரின்சி வைஸ்லா, பாலசரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மீனவர்களுக்கு 100 விழுக்காடு மானியத்துடன் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைத்தொடர்புக் கருவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின், இடையே தருவைகுளம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மகாராஜன் என்பவர், "மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இது நாள் வரையில் ஏன் நடத்தப்படவில்லை" என ஆவேசமாகச் சத்தமிட்டார். அவரின், இத்தகைய பேச்சினை கண்டித்து அமைச்சரின் ஆதரவாளர்களும் பதிலுக்குச் சத்தமிட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கூச்சலிட்டதால் பரபரப்பு

இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் நிகழ்ச்சியினை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர்கள் மேரி பிரின்சி வைஸ்லா, பாலசரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Intro:தருவைக்குளத்தில்
மீனவர் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி:
மீனவர் குறைதீர் கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர் - அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்கள் கண்டித்ததால் நிகழ்ச்சியில் பரபரப்புBody:

தூத்துக்குடி

மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மீனவர்களுக்கு 100 சதவீத மானியத்துடன் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில்
நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைத்தொடர்புக் கருவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன்பிடித்தளத்தை தாங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீன்பிடி விசைப் படகுகளில் 110 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளை 11 குழுக்களாக பிரித்து குழு ஒன்றிற்கு 10 விசைப்படகுகள் வீதம் ஒரு குழுவிற்கு ரூ. 2 லட்சத்து 59 ஆயிரத்து 526 மதிப்பில் 2 செயற்கைகோள் தொலைத்தொடர்பு கருவிகள், 2 செயற்கைக்கோள் அலைபேசிகள் மற்றும் வானிலை குறித்த முன்னெச்சரிக்கை தெரிவிக்கும் பிரத்தியேக கருவி என 22 யூனிட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இடையே தருவைகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் என்பவர் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இது நாள் வரையில் நடத்தப்படவில்லையே ஏன்? என ஆவேசமாக சத்தமிட்டார். இதனால் நிகழ்ச்சி அரங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் மீனவர் பிரதிநிதிகளாக வந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தருவைகுளம் ஊரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் குறைகளை கூற வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே மீனவர்களுடைய கருத்தினை அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் தெரிவிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சியின் நோக்கமே விளம்பரம் செய்வது மட்டும்தான் என்றும் அவர் பரபரப்பு குற்றம் சாட்டினார். இதனால் அங்கு நிகழ்ச்சி அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தலைவரின் இத்தகைய பேச்சினை கண்டித்து அமைச்சருடன் வந்திருந்த அவருடைய ஆதரவாளர்களும் பதிலுக்கு சட்டம் விட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி , எம்.எல்.ஏ.சின்னப்பன் ஆகியோர் நிகழ்ச்சியினை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திர உதவி இயக்குனர்கள் மேரி பிரிண்சி வைஸ்லா, பாலசரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.