ETV Bharat / state

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

author img

By

Published : Dec 21, 2022, 11:42 AM IST

தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது
தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது

தூத்துக்குடியின் தமிழ் சாலை அருகே நேற்று (டிசம்பர் 20) 5 மாத பெண் குழந்தை சட்டவிரோதமாக விற்கப்பட உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ் சாலை அருகே உள்ள கோவிலின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த மாரியப்பன் (44), மேற்படி குழந்தையின் தாயாரான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி (22). இவரது தாயார் சிவசங்கர் மனைவி அய்யம்மாள் (40), தூத்துக்குடி 3ஆவது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு தூத்துக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி!

தூத்துக்குடியின் தமிழ் சாலை அருகே நேற்று (டிசம்பர் 20) 5 மாத பெண் குழந்தை சட்டவிரோதமாக விற்கப்பட உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ் சாலை அருகே உள்ள கோவிலின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த மாரியப்பன் (44), மேற்படி குழந்தையின் தாயாரான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி (22). இவரது தாயார் சிவசங்கர் மனைவி அய்யம்மாள் (40), தூத்துக்குடி 3ஆவது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு தூத்துக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.