ETV Bharat / state

கனமழைக்கு வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து இரண்டு பேர் உயிரிழப்பு! - thiruvarur district news

திருவாரூர்: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழைக்கு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு  two men death in thiruvarur after falling house wall due to the heavy rain  thiruvarur district news  திருவாரூர் மாவட்டச் செய்திகள்
two men death in thiruvarur after falling house wall due to the heavy rain
author img

By

Published : Dec 3, 2019, 9:31 PM IST

திருவாரூரில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கொரடாச்சேரி அருகே செட்டிசிமிலி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி(49) அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வீட்டின் ஒருபக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று கொரடாச்சேரி அருகே பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் அவரது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவலர்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

கனமழைக்கு வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து இரண்டு பேர் உயிரிழப்பு

தொடர்மழை காரணமாக இன்று ஒரே நாளில் கொரடாச்சேரி பகுதியில் வெவ்வெறு இடங்களில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணம் ஏற்படுத்திய தொண்டு நிறுவனம்!

திருவாரூரில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கொரடாச்சேரி அருகே செட்டிசிமிலி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி(49) அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வீட்டின் ஒருபக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று கொரடாச்சேரி அருகே பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் அவரது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவலர்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

கனமழைக்கு வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து இரண்டு பேர் உயிரிழப்பு

தொடர்மழை காரணமாக இன்று ஒரே நாளில் கொரடாச்சேரி பகுதியில் வெவ்வெறு இடங்களில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விமான பயணம் ஏற்படுத்திய தொண்டு நிறுவனம்!

Intro:Body:திருவாரூரில் தொடர் மழை காரணமாக வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரடாச்சேரி அருகே செட்டிசிமிலி கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி 49 இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்ததில் பக்கிரிசாமி மீது விழுந்ததில் சம்பவ இடத்தில் பலியானார்.
இதேபோன்று கொரடாச்சேரி அருகே பூங்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் (75). இவர் அவரது கூரை வீட்டில் தூங்கியுள்ளார். காலையில் அவரது பேத்தி உமா வந்து பார்த்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக இன்று ஒரே நாளில் கொரடாச்சேரி பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.