ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு: திருவாரூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!

author img

By

Published : Jun 15, 2021, 10:45 PM IST

திருவாரூர்: முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கிவைத்தார்.

கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு: திருவாரூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!
கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு: திருவாரூர் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும், 14 வகை அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூன் 15) திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், கரோனா நிவாரண நீதியான 2 ஆயிரம் ரூபாய் பணம், 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு பூண்டி கலைவாணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வட்டாச்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள், திமுக கட்சி பிரமுகர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும், 14 வகை அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜூன் 15) திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், கரோனா நிவாரண நீதியான 2 ஆயிரம் ரூபாய் பணம், 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு பூண்டி கலைவாணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வட்டாச்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள், திமுக கட்சி பிரமுகர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.