புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
![திருவாரூரில் கழிவுநீர் தேக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-03-ttp-rain-drainege-water-vis-script-byte-tn10029_04122020143010_0412f_1607072410_893.jpg)
இதனால் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட நந்தவன தெரு, தெற்கு வீதி, வணக்கார தெரு, நெடும்பலம் உள்ளிட்ட இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தேங்கியுள்ளது.
![திருவாரூரில் கழிவுநீர் தேக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-03-ttp-rain-drainege-water-vis-script-byte-tn10029_04122020143010_0412f_1607072410_203.jpg)
இப்பகுதிகளில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
![திருவாரூரில் கழிவுநீர் தேக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-03-ttp-rain-drainege-water-vis-script-byte-tn10029_04122020143010_0412f_1607072410_998.jpg)
தொடர்ந்து இரண்டு நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிவாசிகள் கழிவுநீரை அகற்ற திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!