ETV Bharat / state

பள்ளி ஆசிரியர்களுக்கு நெகிழி குறித்த விழிப்புணர்வு கண்காட்சி! - ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்

திருவாரூர்: நெகிழிப் பொருட்களுக்கான தடை, அவற்றுக்கான மாற்று பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

plastic-awareness-exhibition-for-school-students
plastic-awareness-exhibition-for-school-students
author img

By

Published : Feb 19, 2020, 10:42 AM IST

தமிழ்நாடு அரசு ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் நெகிழி பயன்பாடு தவிர்க்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள நெகிழிப் பொருட்கள் மீதான தடை குறித்தும், நெகிழிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

மேலும், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக கரும்பு சக்கையில் இருந்து செய்யப்பட்ட தட்டுகள், பேப்பர்களை கொண்டுச் செய்யப்பட்ட பைகள், பாக்கு மட்டைகள், மண் குவளைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: மேம்பாலம் கட்டடத்தின் மேலிருந்து கொட்டும் தண்ணீரில் சினிமா பாட்டு!

தமிழ்நாடு அரசு ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் நெகிழி பயன்பாடு தவிர்க்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, அவற்றுக்கான மாற்றுப் பொருட்களை பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில், பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள நெகிழிப் பொருட்கள் மீதான தடை குறித்தும், நெகிழிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

மேலும், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக கரும்பு சக்கையில் இருந்து செய்யப்பட்ட தட்டுகள், பேப்பர்களை கொண்டுச் செய்யப்பட்ட பைகள், பாக்கு மட்டைகள், மண் குவளைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: மேம்பாலம் கட்டடத்தின் மேலிருந்து கொட்டும் தண்ணீரில் சினிமா பாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.