ETV Bharat / state

குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நூதன விழிப்புணர்வு - திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சாலையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் நோக்குடன் நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

tiruvarur
author img

By

Published : Sep 25, 2019, 2:31 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஒன்று சேர்ந்து பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டும் இடத்தை தூய்மைப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தூய்மைப்படுத்திய இடத்தில் ஐந்துவகை வண்ணப் பூக்களால் கோலமிட்டு மறுபடியும் குப்பைகளை கொட்டாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருத்துறைப்பூண்டி அருகே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நூதன விழிப்புணர்வு

குப்பைகளை சுத்தம் செய்தது மட்டுமல்லாமல் அங்கு கோலமிட்ட நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:

அரசு மருத்துவமனையில் குவிந்திருக்கும் குப்பை: நோயாளிகள் அவதி!

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஒன்று சேர்ந்து பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டும் இடத்தை தூய்மைப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தூய்மைப்படுத்திய இடத்தில் ஐந்துவகை வண்ணப் பூக்களால் கோலமிட்டு மறுபடியும் குப்பைகளை கொட்டாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருத்துறைப்பூண்டி அருகே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நூதன விழிப்புணர்வு

குப்பைகளை சுத்தம் செய்தது மட்டுமல்லாமல் அங்கு கோலமிட்ட நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:

அரசு மருத்துவமனையில் குவிந்திருக்கும் குப்பை: நோயாளிகள் அவதி!

Intro:Body:திருத்துறைப்பூண்டியில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பைகொட்டும் இடத்தை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்த நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், விதியோர கடைகள் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டும் இடத்தை தேர்வு செய்து அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து ரங்கோலி கோலமிட்டு ஐந்து வகை பூக்களால் அலங்கரித்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் குப்பை கழிவுகளை கையாளுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, நகராட்சியின் இச்செயல் மக்களை வெகுவாக ஈர்த்துவருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.