ETV Bharat / state

பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை! - thiruvarur district news

திருவாரூர் : நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல்
பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல்
author img

By

Published : Jun 9, 2021, 12:38 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் அதிகம் இருப்பதால் இலைகள் முழுவதும் பழுப்பு நிறத்தில் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " தற்போது கோடை பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக நன்னிலம், முகந்தனூர் ,மாத்தூர் ,அன்னதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவுப் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் பருத்தியில் இலைகள் முழுவதும் கொட்டத் தொடங்கி, நிறங்கள் முழுவதுமாக மாறத் தொடங்கியுள்ளது.

தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நோய் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்கப்படுகிறது. வேளாண் துறை அலுவலர்கள் வராததால் குழப்பத்தில் உள்ளோம்.

பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல்
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேளாண்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஏரியை ஆக்கிரமித்த கட்டடங்கள் இடிப்பு: ரூ.8.40 கோடி நிலங்கள் மீட்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் அதிகம் இருப்பதால் இலைகள் முழுவதும் பழுப்பு நிறத்தில் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " தற்போது கோடை பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக நன்னிலம், முகந்தனூர் ,மாத்தூர் ,அன்னதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவுப் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் பருத்தியில் இலைகள் முழுவதும் கொட்டத் தொடங்கி, நிறங்கள் முழுவதுமாக மாறத் தொடங்கியுள்ளது.

தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நோய் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்கப்படுகிறது. வேளாண் துறை அலுவலர்கள் வராததால் குழப்பத்தில் உள்ளோம்.

பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல்
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேளாண்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஏரியை ஆக்கிரமித்த கட்டடங்கள் இடிப்பு: ரூ.8.40 கோடி நிலங்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.