ETV Bharat / state

சாலையில் கிடக்கும் நெல்மணிகள் - மீண்டும் நாற்றாகும் அவலம்!

author img

By

Published : Oct 30, 2020, 11:03 AM IST

திருவாரூர்: மன்னார்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் மணிகள் கொள்முதல் செய்யப்படாததால், பனியில் முளைக்கத் தொடங்கியுள்ளது. நெல்மணிகள் மீண்டும் நாற்றாகும் நிலையைக் கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…
கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகள் குறுவையில் அறுவடை செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக, நெல்மணியை சாலையில் கொட்டி வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் 400 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை வைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், கடந்த 20 நாட்களாக சாலையில் கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

முளைக்க தொடங்கிய நெல் மணிகள்
முளைத்த நெல்மணிகளை காட்டும் விவசாயிகள்!

இந்த நிலையில், பனியால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. பனியில் நனைந்த நெல்மணிகள் மீண்டும் நாற்றாகிவருவதைக் கண்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "தற்போது நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

நெல்மணிகள் முளைப்புத் திறன் கொண்டும், சாம்பல் நிறமாகவும் மாறி காணப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் கொடுத்து இரண்டு நாட்களில் விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறிவருகிறார்.

கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…
சாலையோரம் கிடக்கும் நெல் மணிகள்!

ஆனால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என்பது முதலமைச்சர் பார்வைக்கு போகிறதா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…
நாற்றாகிய நெல்மணிகளை காட்டும் விவசாயிகள்!

எனவே இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகம் முன்பு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்". என்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே எடமேலையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகள் குறுவையில் அறுவடை செய்த நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்காக, நெல்மணியை சாலையில் கொட்டி வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் 400 முதல் 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை வைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், கடந்த 20 நாட்களாக சாலையில் கொட்டி வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

முளைக்க தொடங்கிய நெல் மணிகள்
முளைத்த நெல்மணிகளை காட்டும் விவசாயிகள்!

இந்த நிலையில், பனியால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளது. பனியில் நனைந்த நெல்மணிகள் மீண்டும் நாற்றாகிவருவதைக் கண்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, "தற்போது நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

நெல்மணிகள் முளைப்புத் திறன் கொண்டும், சாம்பல் நிறமாகவும் மாறி காணப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் கொடுத்து இரண்டு நாட்களில் விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறிவருகிறார்.

கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…
சாலையோரம் கிடக்கும் நெல் மணிகள்!

ஆனால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என்பது முதலமைச்சர் பார்வைக்கு போகிறதா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கொள்முதல் செய்யாமல் 20 நாட்களுக்கு மேலாக சாலையில் கிடக்கும் நெல் மணிகள்…
நாற்றாகிய நெல்மணிகளை காட்டும் விவசாயிகள்!

எனவே இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகம் முன்பு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்". என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.