திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள உத்திரங்குடி, கீழப்பாலையூர், மஞ்சக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர், " திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பின்படி 89,232-ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இதில் 3,96,675 ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டிற்கான தொகையினை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.