போக்குவரத்துத் துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கடந்த 2018-19ஆம் ஆண்டில் மட்டும் நாகப்பட்டினம் மண்டலத்திற்கு 149 பேருந்துகள் ஒதுக்கப்பட்டு, அதில் திருவாரூர் மாவட்டத்தில் 43 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு புதிய பேருந்துகளை திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இப்பேருந்துகள் திருவாரூர்-பழனி, மன்னார்குடி-கோவை, நன்னிலம்-திருச்சி, திருத்துறைப்பூண்டி-திருப்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட இருக்கிறது.
புதிய பேருந்துகள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், வட்டார அலுவலர் ஜெயபிரிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குறைந்த கட்டணத்தில் அதிக வசதிகளுடன் பேருந்துகள் இயக்கம் - திண்டுக்கல் சீனிவாசன்