ETV Bharat / state

டெங்கு தடுப்பு நடவடிக்கை; திடீர் ஆய்வு செய்த உதவி ஆட்சியர்! - District Inspector of Periyanakipuram, Kishore Didier conducted the survey

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர், வீடு வீடாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே டெங்கு விழிப்புணர்வு
author img

By

Published : Oct 6, 2019, 3:40 AM IST

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணியாளர்களைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே பெரியநாயகிபுரத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரியநாயகிபுரத்தில் மாவட்ட உதவி ஆட்சியர், கிஷோர் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்

வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்த அவர், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், தொட்டிகள், குடங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவற்றில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தி உள்ளதா என்பதை பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே எடுத்துக் கூறினார்.

அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கிய அவர், பொதுமக்களிடம் டெங்கு தடுப்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க: ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணியாளர்களைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே பெரியநாயகிபுரத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெரியநாயகிபுரத்தில் மாவட்ட உதவி ஆட்சியர், கிஷோர் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்

வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்த அவர், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், தொட்டிகள், குடங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவற்றில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுப் புழுக்களின் உற்பத்தி உள்ளதா என்பதை பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே எடுத்துக் கூறினார்.

அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கிய அவர், பொதுமக்களிடம் டெங்கு தடுப்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க: ஆவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு!

Intro:Body:
திருத்துறைப்பூண்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியர் கிஷோர் சென்று டெங்கு தடுப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணியாளர்களை கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே பெரியநாயகி புரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளாக கருதப்பட்ட இடத்தில் திருவாரூர் மாவட்ட உதவி ஆட்சியரும்,திட்ட அலுவலருமான கிஷோர் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் வீடு வீடாக சென்ற அவர் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், சிமெண்டு தொட்டிகள், குடங்கள், குளிர்சாதன பெட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கல் போன்றவற்றில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களின் உற்பத்தி உள்ளதா? என்பதை பார்வையிட்டார். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஒவ்வொரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போதும், அந்தந்த பகுதி மக்களுக்கும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் உதவி ஆட்சியர் வழங்கினார்.மேலும் டெங்கு தடுப்பு குறித்து வரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு பொதுமக்கள் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.