திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மேலும் ஊரடங்கு அறிவித்த பின்னர் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவரவர் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 விழுக்காடு வழங்கப்பட்டுவிட்டது.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிகளுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதலமைச்சர் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வார். கரோனா காலத்தில் தமிழ்நாடு அரசு மீது யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டு கூறலாம். இந்த நேரத்தில் குற்றச்சாட்டு வைத்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்ட முதலமைச்சர்!