ETV Bharat / state

திருவண்ணாமலையில் உலக விண்வெளி வார விழா, கண்காட்சி!

author img

By

Published : Oct 10, 2019, 8:46 AM IST

திருவண்ணாமலை: ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மையம் சார்பில் நடைபெறும் உலக விண்வெளி வார விழா, கண்காட்சி இரண்டு நாள் நிகழ்வாக அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

thiruvannamalai arunai engineering college space week

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மையம் சார்பாக உலக விண்வெளி வார விழா, கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக உலக விண்வெளி வாரவிழா, கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.

thiruvannamalai arunai engineering college space week
உலக விண்வெளி வார விழாவை தொடங்கிவைத்த ஆட்சியர் கந்தசாமி

இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தமுறை ராக்கெட் ஏவுகணை செலுத்தும் நிகழ்வினை நேரடியாக காண்பதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு படிக்க மட்டும் அனுப்பக் கூடாது. கற்பனைத்திறனை மாணவர்களிடத்தில் கொண்டு வர வேண்டும். மேலும், அவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்த நாம் கனவுகண்ட பணியைச் செய்யும்போதுதான் நம்முடைய பணி சிறக்கும்" என்றார்.

thiruvannamalai arunai engineering college space week
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ராக்கெட் மாதிரி

உலக விண்வெளி வார விழாவின் முக்கிய நிகழ்வாக அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட், செயற்கைக்கோள்களின் மாதிரிகள் கல்லூரி வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீன அதிபர் வருகை - புதியப் பூங்கா, சுவர் ஓவியம் என அதிரடி காட்டும் சென்னை!

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மையம் சார்பாக உலக விண்வெளி வார விழா, கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத், பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக உலக விண்வெளி வாரவிழா, கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.

thiruvannamalai arunai engineering college space week
உலக விண்வெளி வார விழாவை தொடங்கிவைத்த ஆட்சியர் கந்தசாமி

இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தமுறை ராக்கெட் ஏவுகணை செலுத்தும் நிகழ்வினை நேரடியாக காண்பதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு படிக்க மட்டும் அனுப்பக் கூடாது. கற்பனைத்திறனை மாணவர்களிடத்தில் கொண்டு வர வேண்டும். மேலும், அவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்த நாம் கனவுகண்ட பணியைச் செய்யும்போதுதான் நம்முடைய பணி சிறக்கும்" என்றார்.

thiruvannamalai arunai engineering college space week
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ராக்கெட் மாதிரி

உலக விண்வெளி வார விழாவின் முக்கிய நிகழ்வாக அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட், செயற்கைக்கோள்களின் மாதிரிகள் கல்லூரி வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீன அதிபர் வருகை - புதியப் பூங்கா, சுவர் ஓவியம் என அதிரடி காட்டும் சென்னை!

Intro:கற்பனைத் திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் ஸ்ரீஹரிகோட்டா மையம் நடத்திய உலக விண்வெளி வார விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.
Body:கற்பனைத் திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் ஸ்ரீஹரிகோட்டா மையம் நடத்திய உலக விண்வெளி வார விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு மையம் சார்பாக நடைபெற்ற உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் வெங்கட்ராமன், உப குழு தலைவர் முனைவர் முனிரத்தினம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பேரன் ஷேக் தாவூத், பேராசிரியர்கள் ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சி இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தமுறை ராக்கெட் ஏவுகணை செலுத்தும் நிகழ்வினை நேரடியாக காண்பதற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களிடம் கனவு காணுங்கள் என்று கூறினார். அப்துல் கலாம் அவர்கள் இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துச் சென்ற பெரிய மகான்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களிடம் கற்பனைத் திறனைக் கொண்டு வரவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு படிக்க மட்டும் அனுப்பக்கூடாது. மாணவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நமக்கு பிடித்த நாம் கனவு கண்ட வேலை செய்யும்போதுதான் நம் பணி சிறக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தங்கள் பணியை விரும்பி செய்து வருகிறார்கள்.

இன்றைய போட்டி உலகத்தில் மற்றவர்களை காட்டிலும் நாம் தனித்து எப்படி இருக்க வேண்டும் என பணியாற்ற வேண்டும். அப்படி பணியாற்றினால் மாணவர்களுக்கு வரும் காலத்தில் சிறந்த மேடை காத்திருக்கிறது. உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சியில் நீங்கள் பார்க்கும் விவரங்களை உங்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

இந்த வருடம் உலக விண்வெளி வாரம் கருவாக நிலவு கோல்களின் வாசல் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் முதல்முறையாக நடைபெறும் உலக விண்வெளி வார விழாவின் முக்கிய நிகழ்வாக அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ராக்கெட் மற்றும் செயற்கை கோள்கள் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:கற்பனைத் திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் ஸ்ரீஹரிகோட்டா மையம் நடத்திய உலக விண்வெளி வார விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேச்சு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.