திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் திருவிழா நடைபெற்று வருகிறது ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாகு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ரிஷப வாகன அலங்காரம் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஷோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
இதையும் படிங்க : ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலுவை பொதுமக்கள் காண வரும் 5ஆம் தேதி வரை அனுமதி