ETV Bharat / state

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை: பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல் அடைந்த அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jan 20, 2020, 6:06 PM IST

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தீபம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் குடியிருப்புக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் குடிபோதையில் விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், திருவண்ணாமலை வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியூருக்கு பணிமாறுதல் கிடைத்துள்ளது எனவும், திருவண்ணாமலையில் அவரது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தொடர்வதால் வெளியூருக்கு செல்ல முடியாத நிலையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் தீபம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் குடியிருப்புக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் குடிபோதையில் விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அரசு ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், திருவண்ணாமலை வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியூருக்கு பணிமாறுதல் கிடைத்துள்ளது எனவும், திருவண்ணாமலையில் அவரது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தொடர்வதால் வெளியூருக்கு செல்ல முடியாத நிலையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி

Intro:பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல், அரசு ஜீப் ஓட்டுநர் ரயிலில் பாய்ந்து தற்கொலை.
Body:பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல், அரசு ஜீப் ஓட்டுநர் ரயிலில் பாய்ந்து தற்கொலை.


திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள ரயில்வே கேட் அருகே குடி போதையில் இருந்த சரவணன் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

சரவணன் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள ஜீப் ஓட்டுநராக உள்ளார்.

இவர் திருவண்ணாமலை தீபம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலக ஜீப் ஓட்டுநர் நேற்று இரவு ரயில்வே கேட் அருகே குடிபோதையில் இருந்த போது விழுப்புரம் நோக்கி சென்ற ரயில் மோதி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை அலுவலகத்திலிருந்து வெளியூருக்கு பணிமாறுதல் பெற்ற காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையால், தங்களுடைய பிள்ளைகள் திருவண்ணாமலையில் பள்ளிப்படிப்பை தொடர்வதால் வெளியூருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ரயில்வே எஸ்ஐ அசோகன், ஆர் பி எஃப் எஸ் ஐ கோவிந்தசாமி மற்றும் காவலர்கள் ரவிசங்கர், கண்ணதாசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:பணி மாறுதல் காரணமாக மன உளைச்சல், அரசு ஜீப் ஓட்டுநர் ரயிலில் பாய்ந்து தற்கொலை.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.