ETV Bharat / state

கல் உடைக்கச் சென்றவர் மீது கல் விழுந்து பலி

author img

By

Published : Jul 11, 2020, 9:42 PM IST

திருவண்ணாமலை: கல் உடைக்கச் சென்றவர் மீது கல் விழுந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்குவாரி
கல்குவாரி

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த இராந்தம் அருகே உள்ள மலையில் கல் உடைக்கக் கருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு கல் உடைத்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சின்னய்யா (வயது 35) என்பவர் மீது கல் சரிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சின்னய்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சின்னய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்குவாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த இராந்தம் அருகே உள்ள மலையில் கல் உடைக்கக் கருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு கல் உடைத்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சின்னய்யா (வயது 35) என்பவர் மீது கல் சரிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சின்னய்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சின்னய்யா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்குவாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.