ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

திருவண்ணாமலை: நேற்று (ஜூன் 26) ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,492 ஆக உயர்ந்துள்ளது.

author img

By

Published : Jun 27, 2020, 2:23 PM IST

thiruvannamalai government hospital
thiruvannamalai government hospital

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 25ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,422ஆக இருந்தது. அதை்தொடர்ந்து நேற்று (ஜூன் 26) புதிதாக 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூருவிலிருந்து வந்த நான்கு பேருக்கும், சென்னையிலிருந்து வந்த ஒன்பது பேருக்கும், ராணிப்பேட்டையிலிருந்து வந்த ஐந்து பேருக்கும், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 19 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,492 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று மட்டும் கரோனா வைரசிலிருந்து குணமடைந்து 564 பேர் வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 25ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,422ஆக இருந்தது. அதை்தொடர்ந்து நேற்று (ஜூன் 26) புதிதாக 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூருவிலிருந்து வந்த நான்கு பேருக்கும், சென்னையிலிருந்து வந்த ஒன்பது பேருக்கும், ராணிப்பேட்டையிலிருந்து வந்த ஐந்து பேருக்கும், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 19 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,492 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று மட்டும் கரோனா வைரசிலிருந்து குணமடைந்து 564 பேர் வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.