ETV Bharat / state

மலையை உடைக்காமல் பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Nov 19, 2019, 4:26 PM IST

திருவண்ணாமலை: நீர் ஆதாரமாக விளங்கும் மலையை உடைக்காமல், பட்டா வழங்க வேண்டும் என செங்குணம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மலையை உடைக்காமல் பட்டா வழங்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செங்குணம் கிராம பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “நாங்கள் செங்குணம் கிராமம், ரோட்டு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறோம். எங்களை மலையை விட்டு வெளியேற சொல்கிறார்கள். கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு மலையை டெண்டர் விட்டு இருப்பதால் மலையை உடைக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மலையே நீராதாரமாக விளங்கி வருகிறது. கால்நடைகளும் இந்த மலையலிருந்து உற்பத்தியாகும் நீரை நம்பியே உள்ளன. ஆகவே இந்த மலையை உடைக்கவிருப்பதால் இப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் மலையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை மலையை விட்டு வெளியேற சொல்கிறார்கள்.

மலையை உடைக்காமல் பட்டா வழங்க வேண்டும்

எங்கள் பிறப்பிடம் மலையடிவாரம், பல காலமாக வாழும் இடத்தில் எங்களை வாழ அனுமதிக்குமாறு செங்குணம் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வரதட்சணை கொடுமை: திருவண்ணாமலையில் பெண் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செங்குணம் கிராம பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “நாங்கள் செங்குணம் கிராமம், ரோட்டு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறோம். எங்களை மலையை விட்டு வெளியேற சொல்கிறார்கள். கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு மலையை டெண்டர் விட்டு இருப்பதால் மலையை உடைக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மலையே நீராதாரமாக விளங்கி வருகிறது. கால்நடைகளும் இந்த மலையலிருந்து உற்பத்தியாகும் நீரை நம்பியே உள்ளன. ஆகவே இந்த மலையை உடைக்கவிருப்பதால் இப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் மலையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை மலையை விட்டு வெளியேற சொல்கிறார்கள்.

மலையை உடைக்காமல் பட்டா வழங்க வேண்டும்

எங்கள் பிறப்பிடம் மலையடிவாரம், பல காலமாக வாழும் இடத்தில் எங்களை வாழ அனுமதிக்குமாறு செங்குணம் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வரதட்சணை கொடுமை: திருவண்ணாமலையில் பெண் தீக்குளிக்க முயற்சி

Intro:நீர் ஆதாரமாக விளங்கும் மலையை உடைக்காமல், பட்டா வழங்க வேண்டும். செங்குணம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.Body:நீர் ஆதாரமாக விளங்கும் மலையை உடைக்காமல், பட்டா வழங்க வேண்டும். செங்குணம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், செங்குணம் கிராம பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாங்கள் செங்குணம் கிராமம், ரோட்டு தெருவில் வசித்து வருகிறோம், எங்களை மலையை விட்டு வெளியேற செல்கிறார்கள், கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு மலையை டெண்டர் விட்டு இருப்பதால் மலையை உடைக்க போகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த மலையை தான் வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறோம். ஆடு, மாடுகளை எல்லாம் தண்ணீர் தந்து வாழ வைக்கும் மலை இந்த மலை. அப்படி இருக்கும்போது மலையை உடைத்தால் வாழ்வாதாரமாக தண்ணீர் கொடுக்கக் கூடிய மலையை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் மலையை விட்டு வெளியேற சொல்கிறார்கள், எப்படி எல்லாவற்றையும் விட்டு வெளியேற முடியும். 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்து வாழ்ந்து வசித்து வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னால் எப்படி வெளியேற முடியும். அந்த மலை மீது யாரும் கை வைக்க கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
மேலும் எங்கள் பிறப்பிடம் மலையடிவாரம், வாழும் இடத்தில் எங்களை வாழ அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை செங்குணம் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம், என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:நீர் ஆதாரமாக விளங்கும் மலையை உடைக்காமல், பட்டா வழங்க வேண்டும். செங்குணம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.