ETV Bharat / state

செங்கம் அருகே நூதன முறையில் மணல் திருடியவர் கைது!

author img

By

Published : Nov 24, 2019, 9:08 AM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த குப்பநத்தம் கோரை ஆற்று ஓடையிலிருந்து நூதன முறையில் மகேந்திரா மினி பிக்கப் வாகனத்தில், மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

sand

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மினி பிக்கப் வாகனத்தில் ஆற்றிலிருந்து மணலைக் கடத்தி வெளிச் சந்தையில் விற்கப்படுவதாக, செங்கம் காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் ஓடையிலிருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்

தொடர்ந்து இந்தப் பகுதியில் மினி வாகனத்தில் ஆறு, ஓடைகளிலிருந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும், காவல்துறையினர் இரவு நேரம், அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபடாததே, இதுபோன்று நூதன முறையில் மணல் கடத்துவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற தடையை மீறி முதலமைச்சர் வருகைக்காக ஆற்றில் மணல் அள்ளும் மாவட்ட நிர்வாகம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மினி பிக்கப் வாகனத்தில் ஆற்றிலிருந்து மணலைக் கடத்தி வெளிச் சந்தையில் விற்கப்படுவதாக, செங்கம் காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் ஓடையிலிருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்டவர்

தொடர்ந்து இந்தப் பகுதியில் மினி வாகனத்தில் ஆறு, ஓடைகளிலிருந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும், காவல்துறையினர் இரவு நேரம், அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபடாததே, இதுபோன்று நூதன முறையில் மணல் கடத்துவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற தடையை மீறி முதலமைச்சர் வருகைக்காக ஆற்றில் மணல் அள்ளும் மாவட்ட நிர்வாகம்!

Intro:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நூதன முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்
Body:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நூதன முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கோரை ஆற்று ஓடையில் தொடர்ந்து நூதன முறையில் மகேந்திரா பிக்கப் வாகனத்தில் மணல் கடத்திய குப்பநத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை காவல் துணை கண்காணிப்பாளர் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் போலீசார் கண்டு கொள்ள முடியாத அளவில் மினி பிக்கப் வாகனத்தில் தொடர்ந்து ஆற்று ஓடையில் மணல் கடத்தி வந்து வெளி சந்தையில் விற்கப்படுவதாக செங்கம் காவல்துறை கண்காணிப்பாளரின் தனி படையினருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் ஓடை மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து குப்பநத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற மினி வாகனத்தில் ஆறு மற்றும் ஓடைகளில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே காவல்துறையினர் இரவு நேரத்திலும் அதிகாலையிலும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடாததே இதுபோன்ற நூதன முறையில் மணல் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நூதன முறையில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.