தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைக்கான ஆயிரம் ரூபாய், ரேஷன் பொருள்கள் விநியோகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 42 ஆயிரத்து 602 குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்கியது.
இதனையடுத்து கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கப்பலூர், வில்வாரணி, மோட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண விதி, ரேஷன் பொருள்களை தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சமூக விலகலை மேற்கொள்ளும் வகையில் கலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும், ஆகவே பொதுமக்கள் அச்சமின்றி கூட்டம் கூடாமல் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று வி.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 86 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிப்பு!