திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், முதல்கட்டமாக இன்று தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட 47 பஞ்சாயத்து கிராமங்களில், 254 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குள்பட்ட கொழுந்தம்பட்டு பகுதியில் 98 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முனியம்மாள் என்பவர் வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். மேலும், மூன்றாண்டு கடந்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் புதிய வாக்காளர்கள் தங்களது முதல் வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தினர்.
இதையும் படிங்க: ஒட்டப்படாத நாம் தமிழர் சின்னம்: மக்களிடம் செல்வாக்கைப் பெற தடுப்பதாக வேட்பாளர் குற்றச்சாட்டு