ETV Bharat / state

சிமெண்ட் இல்லாத மின் கம்பம்: அச்சத்தில் விவசாயிகள்!

திருவண்ணாமலை: கருந்துவாம்பாடி கிராமத்தில் மின் கம்பத்தை தாங்கிப்பிடிக்கும் கம்பிகளில் சிமெண்ட் இல்லாமல் இருப்பதை சீர் செய்வதற்கு தமிழ்நாடு மின் வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது என்று பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

author img

By

Published : Jun 28, 2019, 10:05 PM IST

electric transformer

திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தின் விளை நிலத்தில் விவசாயம் செய்து பல விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். விவசாயிகள் விளை நிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சிமெண்ட் இல்லாமல் வெறும் கம்பிகளால் நின்று கொண்டிருக்கின்றது. இதுகுறித்து, மின்வாரிய துறையிடம் விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் மின்சாரத் துறை ஊழியர்கள் பழுதான மின் கம்பங்களை மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர், "எதற்கெடுத்தாலும் மின்வாரிய துறையைச் சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கின்றனர். இதுவரை புதிய கம்பம் வைத்தபதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளோம் என்றார்.

சிமெண்ட் இல்லாத மின் கம்பம்: அச்சத்தில் விவசாயிகள்!

மேலும் கம்பம் எடுத்துவர டிரான்ஸ்போர்ட் சார்ஜ் பெற்றுக் கொண்டுள்ளனர். பின்னர் குழிதோண்டி வைக்குமாறும் கூறிச் சென்றனர், ஆனால் அதனை சீர் செய்ய ஊழியர்கள் எவரும் வரவில்லை. தோண்டிய குழியில் பல மாதங்களாகியும் அலுவலர்கள் வராத காரணத்தால் அக்குழியில் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது. இடி, காற்று, மழை காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல், உயிருக்கு பயந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றார். மேலும், எங்களின், துயர் தீர்ப்பதற்கு மின்சார வாரியத் துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பங்களை மாற்றி விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தின் விளை நிலத்தில் விவசாயம் செய்து பல விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். விவசாயிகள் விளை நிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சிமெண்ட் இல்லாமல் வெறும் கம்பிகளால் நின்று கொண்டிருக்கின்றது. இதுகுறித்து, மின்வாரிய துறையிடம் விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் மின்சாரத் துறை ஊழியர்கள் பழுதான மின் கம்பங்களை மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர், "எதற்கெடுத்தாலும் மின்வாரிய துறையைச் சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கின்றனர். இதுவரை புதிய கம்பம் வைத்தபதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளோம் என்றார்.

சிமெண்ட் இல்லாத மின் கம்பம்: அச்சத்தில் விவசாயிகள்!

மேலும் கம்பம் எடுத்துவர டிரான்ஸ்போர்ட் சார்ஜ் பெற்றுக் கொண்டுள்ளனர். பின்னர் குழிதோண்டி வைக்குமாறும் கூறிச் சென்றனர், ஆனால் அதனை சீர் செய்ய ஊழியர்கள் எவரும் வரவில்லை. தோண்டிய குழியில் பல மாதங்களாகியும் அலுவலர்கள் வராத காரணத்தால் அக்குழியில் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது. இடி, காற்று, மழை காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல், உயிருக்கு பயந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றார். மேலும், எங்களின், துயர் தீர்ப்பதற்கு மின்சார வாரியத் துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பங்களை மாற்றி விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

Intro:திருவண்ணாமலை மாவட்டம் கருந்துவாம்பாடி கிராமத்தில் மின் கம்பத்தை தாங்கிப்பிடிக்கும் கம்பிகள், அலட்சியத்தில் தமிழக மின் வாரியம், உயிருக்கு அஞ்சி வாழும் விவசாயிகள்.


Body:திருவண்ணாமலை மாவட்டம் கருந்துவாம்பாடி கிராமத்தில் மின் கம்பத்தை தாங்கிப்பிடிக்கும் கம்பிகள், அலட்சியத்தில் தமிழக மின் வாரியம், உயிருக்கு அஞ்சி வாழும் விவசாயிகள். திருவண்ணாமலை தமிழ்நாடு மின்சார துறையின் அலட்சியத்தால் உயிருக்கு பயந்து வாழும் நிலை கருந்துவாம்பாடி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தின் விளை நிலத்தில் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனர் விவசாயிகள். விளை நிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சிமெண்ட் கூட இல்லாமல் வெறும் கம்பிகளால் நின்று கொண்டிருக்கின்றது. இதுபற்றி மின்சாரவாரிய துறையிடம் விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் மின்சாரத் துறை ஊழியர்கள் பழுதான மின் கம்பங்களை மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எதற்கெடுத்தாலும் மின்வாரிய துறையைச் சேர்ந்தவர்கள் 5000 ரூபாய் 10,000 ரூபாய் கொடுங்கள் என்று விவசாயிகளிடம் பணம் மட்டும் பெற்றுக் கொள்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். புதிய கம்பத்திற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கம்பம் எடுத்துவர டிரான்ஸ்போர்ட் சார்ஜ் மட்டும் பெற்றுக் கொண்டுள்ளனர். பின்னர் குழிதோண்டி வைக்குமாறும் கூறிச் சென்றுள்ளனர் திரும்பி வரவே இல்லை. தோண்டிய குழியில் பல மாதங்களாகியும் அதிகாரிகள் வராத காரணத்தால் அந்த குழுவில் விவசாயிகள் வளர்த்து வந்த கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து இறந்து போனது தான் மிச்சம். இடி காற்று மற்றும் மழை காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் வேதனையோடு உயிருக்கு பயந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆடுகள் மாடுகள் குழந்தை குட்டிகள் என குடும்பங்களோடு உயிருக்கு பயந்து அந்த பகுதியில் விவசாயம் செய்ய வேண்டிய அவல நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளுமா மின்சார வாரிய துறை. இந்த விவசாயிகளின் துயர் தீர்ப்பதற்கு மின்சார வாரிய துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பங்களை மாற்றி விவசாயிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி சேற்றில் காலை வைத்தால் தான் இந்த மின்வாரிய ஊழியர்கள் சோற்றில் கை வைக்க முடியும்.ஆனால் உணவளிக்கும் விவசாயிகளிடமிருந்து பணத்தை அறுவடை செய்யும் அதிகாரிகள் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. தற்போது கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மழை வந்தாலும் மழைக்காலங்களிலும் தங்களுடைய விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இப்படி அனைத்து விதத்திலும் பாதிக்கப்படும் விவசாயி புண்ணியத்தை மட்டும் அறுவடை செய்வதாக நினைத்து நிம்மதி அடைந்து கொள்ள வேண்டியது தான்.


Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் கருந்துவாம்பாடி கிராமத்தில் மின் கம்பத்தை தாங்கிப்பிடிக்கும் கம்பிகள், அலட்சியத்தில் தமிழக மின் வாரியம், உயிருக்கு அஞ்சி வாழும் விவசாயிகள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.