ETV Bharat / state

இரத்த பரிசோதனை நிலையத்தில் ஆங்கில மருத்துவம்: போலி மருத்துவர் தப்பியோட்டம் - இரத்த பரிசோதனை நிலையத்தில் ஆங்கில மருத்துவம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ரத்த பரிசோதனை நிலையத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இரத்த பரிசோதனை நிலையம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த மருத்துவமனைக்கு மருத்துவ அலுவலர், வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

Fake
Fake
author img

By

Published : Jun 26, 2021, 5:05 PM IST

திருவண்ணாமலை ; செங்கம் பழைய பேருந்து நிலையம் எதிரே நந்தினி பிரியா என்ற பெயரில் இயங்கி வரும் இரத்த பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ அலுவலருக்கு புகார் வந்தது.

இதன் அடிப்படையில், ரத்த பரிசோதனை நிலையத்தை மருத்துவதுறை அலுவலர் அருளானந்தம் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், பரிசோதனை நிலையத்தை நடத்திவந்த ரேணுகா என்பவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து ரத்த பரிசோதனை மையத்திற்கு அவர்கள் சீல் வைத்தனர்.

Fake
போலி மருத்துவர் ரேணுகா

மேலும் மருத்துவ அலுவலர்கள் சோதனை செய்ய வருவது குறித்து அறிந்த ரேணுகா அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் காவல்துறையினருக்கு புகார் அளித்ததையடுத்து தப்பியோடிய ரேணுகாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்தியூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது

திருவண்ணாமலை ; செங்கம் பழைய பேருந்து நிலையம் எதிரே நந்தினி பிரியா என்ற பெயரில் இயங்கி வரும் இரத்த பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ அலுவலருக்கு புகார் வந்தது.

இதன் அடிப்படையில், ரத்த பரிசோதனை நிலையத்தை மருத்துவதுறை அலுவலர் அருளானந்தம் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், பரிசோதனை நிலையத்தை நடத்திவந்த ரேணுகா என்பவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து ரத்த பரிசோதனை மையத்திற்கு அவர்கள் சீல் வைத்தனர்.

Fake
போலி மருத்துவர் ரேணுகா

மேலும் மருத்துவ அலுவலர்கள் சோதனை செய்ய வருவது குறித்து அறிந்த ரேணுகா அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் காவல்துறையினருக்கு புகார் அளித்ததையடுத்து தப்பியோடிய ரேணுகாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்தியூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.