திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மலைக்குழந்தை (45), தற்போது, சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி இளவரசி, குழந்தைகளுடன் செய்யார் தாலுக்கா வள்ளலார் நகரில் வசித்து வரும் இவர், தனது சொந்த கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வீட்டின் கட்டுமான பணிக்காக செய்யாரிலிருந்து இருசக்கர வாகனத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு தனது கிராமம் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆரணி அருகே இரும்பேடு கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் உரிய ஆவணங்கள் இன்றி மலைக்குழந்தை வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 29 ஆயிரத்து 500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தைக் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு தேர்தல் பறக்கும் படையினர் மலைக்குழந்தையிடம் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க : மநீம முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மாற்றம்!