ETV Bharat / state

தி.மலையில் சத்துணவு வேலை வாங்கித் தருவதாக மோசடி

author img

By

Published : Mar 10, 2021, 2:53 PM IST

திருவண்ணாமலை: தனக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று லட்சத்து 95 ஆயிரம் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

3லட்சத்து,95ஆயிரம் மோசடி
3லட்சத்து,95ஆயிரம் மோசடி

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நான் பி.சி.ஏ. (BCA) படித்துள்ளேன். என் கணவர் லாரி ஓட்டுநராக வேலைசெய்து எங்களைக் காப்பாற்றிவருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரகம் அறிவித்திருந்த, சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று எனது கைப்பேசிக்கு 9786424582 என்ற எண்ணிலிருந்து அழைப்புவந்தது. அந்த அழைப்பில் என்னிடம் மறுமுனையில் பேசிய நபர், 'நான் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே, அதில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நான்கு லட்சம் தந்தீர்கள் என்றால் வேலை வாங்கித் தருவேன்' என்று ஆசைவார்த்தை கூறி நம்பிக்கை அளித்தார்.

அதனை நம்பி நான் அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் ஐந்து தவணையாக மொத்தம் மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 700 செலுத்தினேன். மேற்படி நான் சிறுகச் சிறுக சேமித்துவைத்திருந்த பணம், எனது நகைகளை அடைமானம் வைத்து செலுத்தினேன்.

அதன்பின்னர் மேற்கண்ட நபரை தொடர்புகொண்டு, எப்போது எனக்குப் பணி ஆணை கிடைக்கும் என்று கேட்டதற்கு, 'அந்த நபர் சில நாள்களில் கடிதம் மூலம் உனக்குப் பணி ஆணை கிடைத்துவிடும்' என்று கூறினார்.

ஆனால் காலம் கடத்தி ஏமாற்றிவந்தார். அதன்பின்னர் மார்ச் 1ஆம் தேதியன்று கைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த நபர் என்னை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.

எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணிடம் நகை மோசடி: இளைஞர் கைது

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நான் பி.சி.ஏ. (BCA) படித்துள்ளேன். என் கணவர் லாரி ஓட்டுநராக வேலைசெய்து எங்களைக் காப்பாற்றிவருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரகம் அறிவித்திருந்த, சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று எனது கைப்பேசிக்கு 9786424582 என்ற எண்ணிலிருந்து அழைப்புவந்தது. அந்த அழைப்பில் என்னிடம் மறுமுனையில் பேசிய நபர், 'நான் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே, அதில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நான்கு லட்சம் தந்தீர்கள் என்றால் வேலை வாங்கித் தருவேன்' என்று ஆசைவார்த்தை கூறி நம்பிக்கை அளித்தார்.

அதனை நம்பி நான் அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் ஐந்து தவணையாக மொத்தம் மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 700 செலுத்தினேன். மேற்படி நான் சிறுகச் சிறுக சேமித்துவைத்திருந்த பணம், எனது நகைகளை அடைமானம் வைத்து செலுத்தினேன்.

அதன்பின்னர் மேற்கண்ட நபரை தொடர்புகொண்டு, எப்போது எனக்குப் பணி ஆணை கிடைக்கும் என்று கேட்டதற்கு, 'அந்த நபர் சில நாள்களில் கடிதம் மூலம் உனக்குப் பணி ஆணை கிடைத்துவிடும்' என்று கூறினார்.

ஆனால் காலம் கடத்தி ஏமாற்றிவந்தார். அதன்பின்னர் மார்ச் 1ஆம் தேதியன்று கைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த நபர் என்னை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்.

எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணிடம் நகை மோசடி: இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.