திருவள்ளூர்: மாதரப்பாக்கம் அடுத்த பூவலம்பேடு பகுதியில் சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தை கண்ட ஓட்டுநர் பிரேக் அடித்ததில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இருவர் உயிரிழப்பு
இதில், டிராக்டர் ஒட்டி வந்த தாணிபூண்டியைச் சேர்ந்த வசந்தகுமார் (25), உடன் சென்ற சதிஷ் (26) ஆகிய இருவரும் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கவரைப்பேட்டை காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் மரணம்