ETV Bharat / state

'நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல' - தொல்.திருமாவளவன் - Nation Archive Public Meeting in Tiruvallur\

திருவள்ளூர்: நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; சனாதனத்துக்கு எதிரானவர்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan
author img

By

Published : Jan 24, 2020, 9:37 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பொதுக்கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட செயலாளர் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சுந்தர் தமிழினியன், இராசகுமார் மற்றும் நிர்வாகிகள் பூண்டி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசு சமத்துவத்தை உடைத்து சகோதரத்துவத்தை பிளந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து வருகிறது. இந்து சமயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உள்ளது. ஆணுக்குப் பெண் அடிமை என சாஸ்திரம் கூறுகிறது.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

ஆனால், இஸ்லாம் மதத்தில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளதால் அவர்களால் ஏற்க முடியவில்லை. நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சனாதனத்துக்கு எதிரானவர்கள். மக்களைப் பிளவுபடுத்தும் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள். மோடி அரசு செய்யும் சூழ்ச்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்திவிட்டது.

நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் 25 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் சேர்ந்து எதிர்த்தால் நாடு தாங்காது என்பதை கருத்தில் கொண்டு தனித்தனியாக சூழ்ச்சி செய்து இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றுகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பொதுக்கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட செயலாளர் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சுந்தர் தமிழினியன், இராசகுமார் மற்றும் நிர்வாகிகள் பூண்டி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசு சமத்துவத்தை உடைத்து சகோதரத்துவத்தை பிளந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து வருகிறது. இந்து சமயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உள்ளது. ஆணுக்குப் பெண் அடிமை என சாஸ்திரம் கூறுகிறது.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

ஆனால், இஸ்லாம் மதத்தில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளதால் அவர்களால் ஏற்க முடியவில்லை. நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சனாதனத்துக்கு எதிரானவர்கள். மக்களைப் பிளவுபடுத்தும் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள். மோடி அரசு செய்யும் சூழ்ச்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்திவிட்டது.

நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் 25 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் சேர்ந்து எதிர்த்தால் நாடு தாங்காது என்பதை கருத்தில் கொண்டு தனித்தனியாக சூழ்ச்சி செய்து இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றுகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை

Intro:திருவள்ளூர் மாவட்டம்

மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என திருவள்ளூரில் நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.


Body:மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என திருவள்ளூரில் நடைபெற்ற தேசம் காப்போம் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் தேசம்காப்போம் பொதுக்கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் மாவட்ட செயலாளர் சித்தார்த் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள் நீல வானத்தில் தளபதி சுந்தர் தமிழினியன் இராசகுமார் மற்றும் நிர்வாகிகள் பூண்டி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உரையாற்றும்போது சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் இந்த மூன்றும் சேர்ந்து தான் ஜனநாயகம் ஆனால் மத்திய மோடி அரசு சமத்துவத்தை உடைத்து சகோதரத்துவத்தை பிளந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்து சமயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உள்ளது ஆணுக்குப் பெண் அடிமை என சாஸ்திரம் கூறுகிறது அது போல அல்லாமல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் மதத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அரசியல் அமைப்பு சட்டமும் ஜனநாயகத்தில் அனைவரும் சமம் என கூறுவதால் அதை மாற்றிய வருகின்றன நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல சமாதானத்துக்கு எதிரானவர்கள் மக்களை பிளவுபடுத்தும் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் பாஜக மோடி அரசு செய்யும் சூழ்ச்சி முதலில் சிறுபான்மையினரை ஒழுங்குபடுத்துவது குடியுரிமை சட்டம் மூலம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி விட்டன. பாஜக மோடி அரசு செய்யும் சூழ்ச்சி சிறுபான்மையினரை தெளிவுபடுத்துவது அடுத்தபடியாக கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்தும் ஒரே நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் குடி உரிமை இல்லை என்றால் அவர்கள் 25 விழுக்காடு உள்ளனர் அவர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் நாடு தாங்காது என்பதை கருத்தில் கொண்டு தனித்தனியாக சூழ்ச்சி செய்து இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றுகின்றனர் என்று கூறினார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.