ETV Bharat / state

குளத்தில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற சென்ற இளம் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு

author img

By

Published : May 28, 2020, 9:09 PM IST

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை, காப்பாற்ற முயன்ற இளம்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

three-killed-including-a-young-woman-who-went-to-save-the-drowned
three-killed-including-a-young-woman-who-went-to-save-the-drowned

திருவள்ளூர் மாவட்டம், செங்கழுநீர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீலா (21). இவர் தன் வீட்டருகே உள்ள குளத்திற்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்களின் குழந்தைகளான ஜெயபிரகாஷ் (7), குணால்(6) ஆகிய இருவரும் இளம்பெண்ணுடன் குளத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஷீலா துணிகளை துவைத்துக் கொண்டிருந்த போது, சகோதரர்கள் இருவரும் குளத்தில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி, கூச்சலிட்டதைக் கண்ட ஷீலா குளத்தில் குதித்து, சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவரும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் குளத்திலிருந்த மூவரையும் மீட்டபோது, மூவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் சகோதரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குமரியில் கைது!

திருவள்ளூர் மாவட்டம், செங்கழுநீர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீலா (21). இவர் தன் வீட்டருகே உள்ள குளத்திற்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்களின் குழந்தைகளான ஜெயபிரகாஷ் (7), குணால்(6) ஆகிய இருவரும் இளம்பெண்ணுடன் குளத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ஷீலா துணிகளை துவைத்துக் கொண்டிருந்த போது, சகோதரர்கள் இருவரும் குளத்தில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி, கூச்சலிட்டதைக் கண்ட ஷீலா குளத்தில் குதித்து, சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவரும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் குளத்திலிருந்த மூவரையும் மீட்டபோது, மூவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல் துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் சகோதரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குமரியில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.