ETV Bharat / state

மூன்று மாதங்களாகக் குடிநீர் இல்லாமல் தவித்த மக்கள்..! - people protest at road

திருவள்ளூர்: அம்மாபேட்டையில் உள்ள அருந்ததியின மக்கள் வசிக்கும் காலனிக்கு மட்டும் மூன்று மாதங்களாகக் குடிநீர் தராமல் தட்டிக்கழிப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் இல்லாமல் தவித்த மக்கள்
author img

By

Published : Sep 12, 2019, 5:47 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளி அம்மாபேட்டை கிராமத்தில் முக்கிய பகுதியாகக் கருதப்படும் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அம்மாபேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாகவே அனைத்து இடங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலனிக்கு மட்டும் தண்ணீர் தராமல் மூன்று மாதங்களாக புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அருந்ததி காலனி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரையும், மாவட்ட திட்ட இயக்குநர் லோகநாயகியை சந்தித்தும் மனு அளித்துள்ளனர், ஆனால் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தண்ணீருக்கு தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளி அம்மாபேட்டை கிராமத்தில் முக்கிய பகுதியாகக் கருதப்படும் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அம்மாபேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாகவே அனைத்து இடங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருந்ததியின மக்கள் வசிக்கும் காலனிக்கு மட்டும் தண்ணீர் தராமல் மூன்று மாதங்களாக புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அருந்ததி காலனி மக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரையும், மாவட்ட திட்ட இயக்குநர் லோகநாயகியை சந்தித்தும் மனு அளித்துள்ளனர், ஆனால் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தண்ணீருக்கு தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திருவள்ளூர் அருகே குடிநீர் வினியோகம் என்று தவியாய் தவிக்கும் அருந்ததி காலனி மக்கள் உரிய முறையில் மனு அளித்து ஒரு மாத காலத்தில் தீர்ப்பதாக உறுதி அளித்து அதிகாரிகள் கைவிட்டதால் தண்ணீருக்கு தவியாய் தவித்து வருகின்றனர்


Body:திருவள்ளூர் மாவட்டம் ராமன் ஜெர்ரி அருகே உள்ள வள்ளி அம்மாபேட்டையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியின் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக உரிய முறையில் குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி அவதிக்கு ஆளாகி வருகின்றன.

வள்ளி அம்மாபேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் அப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அருந்ததியின் மக்கள் வசிக்கும் பகுதிகள் மட்டும் புறக்கணித்து கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முறையிட்டோம் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி இதுகுறித்து முறையிட்டு மனு அளித்து ஒரு மாதம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த நிலையில் புரட்சி மக்கள் பாதை அமைப்பு செயலாளர் பாபு தலைமையில் அதன் நிறுவன தலைவர் பாலாஜி அப்பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டு கிராம மக்களுக்கு தற்காலிக தீர்வாக டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டனர் அருந்ததியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உரிய முறையில் தண்ணீர் பிரச்சினையை போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்

பேட்டி திரு பாலாஜி புதிய மக்கள் பாதை கட்சித்தலைவர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.