ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் - மாமல்லபுரம் வெளிவட்ட சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்! - திருவள்ளூர்

திருவள்ளூர்:  ஸ்ரீபெரும்புதூர் - மாமல்லபுரம் வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களை அளவிட வந்த ஊழியர்களுடன், கிராமமக்கள் வாக்குவாதம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Aug 23, 2019, 8:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகம், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை இணைக்கும் வகையில் 139 கிலோமீட்டர் தொலைவில், சென்னைக்கு வெளிவட்ட சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைத்தல் பணிகளுக்கு 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் திருவள்ளூர் பைப்பாஸ், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஆறுவழிச்சாலை அமைக்க ஆயிரத்து 420 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, ரசாயனம், கச்சா எண்ணெய், உள்ளிட்டவைகளை எளிதாக கொண்டுச் செல்வதற்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையாமல் ஆந்திரா செல்வதற்கும் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

sriperumbudur via road sige by people  for 6 way road plan  protesting against government  thiruvallur  திருவள்ளூர்
நிலம் அளவிடும் பணியில் அரசு ஊழியர்கள்

ஒருவழி சாலையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, கடந்த 2009ஆம் ஆண்டு இருவழி சாலையாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அமைக்க உள்ள வெளிவட்ட சாலையால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்படுகிறது.

sriperumbudur via road sige by people  for 6 way road plan  protesting against government  thiruvallur  திருவள்ளூர்
கோரிக்கை வைக்கும் செங்காடு மக்கள்

அதற்கான அளவீடு செய்யும் பணிகளை அரசு ஊழியர்கள் மேற்கொண்டபோது, செங்காடு கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் வெளிவட்ட சாலையால் பாதிக்கப்படுவதுடன் இக்கிராமத்தில் உள்ள மாமரம், புளிய மரம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் - மாமல்லபுரம் வெளிவட்ட சாலை

இதனால், இன்று அளவீடு செய்ய வந்த ஊழியர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு இடத்தையும் உரிய இழப்பீடும் உடனடியாக வழங்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகம், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை இணைக்கும் வகையில் 139 கிலோமீட்டர் தொலைவில், சென்னைக்கு வெளிவட்ட சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைத்தல் பணிகளுக்கு 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் திருவள்ளூர் பைப்பாஸ், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஆறுவழிச்சாலை அமைக்க ஆயிரத்து 420 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, ரசாயனம், கச்சா எண்ணெய், உள்ளிட்டவைகளை எளிதாக கொண்டுச் செல்வதற்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையாமல் ஆந்திரா செல்வதற்கும் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

sriperumbudur via road sige by people  for 6 way road plan  protesting against government  thiruvallur  திருவள்ளூர்
நிலம் அளவிடும் பணியில் அரசு ஊழியர்கள்

ஒருவழி சாலையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, கடந்த 2009ஆம் ஆண்டு இருவழி சாலையாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அமைக்க உள்ள வெளிவட்ட சாலையால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்படுகிறது.

sriperumbudur via road sige by people  for 6 way road plan  protesting against government  thiruvallur  திருவள்ளூர்
கோரிக்கை வைக்கும் செங்காடு மக்கள்

அதற்கான அளவீடு செய்யும் பணிகளை அரசு ஊழியர்கள் மேற்கொண்டபோது, செங்காடு கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் வெளிவட்ட சாலையால் பாதிக்கப்படுவதுடன் இக்கிராமத்தில் உள்ள மாமரம், புளிய மரம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் - மாமல்லபுரம் வெளிவட்ட சாலை

இதனால், இன்று அளவீடு செய்ய வந்த ஊழியர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு இடத்தையும் உரிய இழப்பீடும் உடனடியாக வழங்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திருவள்ளூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரம் வெளிவட்ட சாலை பணிக்கு அளவிட வந்த ஊழியர்களுடன் கிராமமக்கள் வாக்குவாதம் செய்ததுடன் மரங்களை வெட்டக் கூடாது என்றும்.

அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம்


எண்ணூர் துறைமுகத்தையும் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் இணைக்கின்ற வகையில் 139 கிலோமீட்டர் தொலைவு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது இத்திட்டத்தை நிறைவேற்ற நிலம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து சுமார் 2300 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் திருவள்ளூர் பைபாஸ் ஸ்ரீபெரும்புதூர் வழியாக அமைக்கப்படுவதற்கு முதற்கட்டமாக 1420 கோடி ரூபாய் கடன் உதவியுடன் ஜப்பான் அதிகாரபூர்வமாக கடன் உதவி என்ற பெயரில் பணி துவங்கப்பட்டுள்ளது

எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி இரும்புத்தாது இயற்கை எரிவாயு ரசாயனம் கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளை எளிதாக கொண்டு செல்லும் விதமாகவும் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் நுழையாமல் எளிதாக ஆந்திர மாநிலத்திற்கு திருவள்ளூர் வழியாக செல்லும் விதமாக ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் உள்ள 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலையை ஏற்படுத்தும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது .



இதற்கு முன்னர் இருந்த 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஒருவழி சாலையாக ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்தது இப்பொழுது கடந்த 2009ல் இருவழி சாலையாக மாற்றப்பட்டது அன்றிலிருந்து தினசரி போக்குவரத்து நெரிசலும் ஏராளமான விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அமைய உள்ள வெளிவட்ட சாலை விபத்துக்களை குறைக்கும் அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தடுக்கும் என்பதால் இந்த சாலை முக்கியமான சாலையாக அரசு கருதி அதற்கான அளவீடு செய்யும் பணிகளை அரசு ஊழியர்களை கொண்டு மேற்கொண்டது இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் சத்திரம் அடுத்த செங்காடு பகுதியில் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெளிவட்ட சாலை பாதிக்கப்படுவதுடன் இக்கிராமத்தில் உள்ள மாமரங்கள் புளிய மரங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகவும் பழமையான மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் .

இன்று அளவீடு செய்ய வந்த ஊழியர்களுடன் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் தங்களுக்கு உரிய இடத்தையும் உரிய இழப்பீடும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதன் பின்னரே பணியை துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால் கிராம மக்கள் உடனடியாக சாலை மறியலை கைவிட்டு ஆம்புலன்சை அனுப்பி வைத்தன. இப்பிரச்சனைகள் சாலை விரிவாக்கத்திற்கு ஈடுபடும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி ஜெய்சங்கர்
செங்காடு

இ டிவி செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.