ETV Bharat / state

பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் - seized 15 kg of cannabis smuggled

திருவள்ளூர்: பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா
பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா
author img

By

Published : Dec 26, 2020, 5:01 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை மடக்கி சோதனை செய்தனர்.

பேருந்தில் இரண்டு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருண் (24) ஆகிய இருவரும் நெல்லூரில் இருந்து கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.

மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை மடக்கி சோதனை செய்தனர்.

பேருந்தில் இரண்டு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருண் (24) ஆகிய இருவரும் நெல்லூரில் இருந்து கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது.

மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.