திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகேவுள்ள புலியம்பேடு பகுதியில் ஹையர் எலக்ட்ரானிக் குடோன் செயல்பட்டுவருகிறது. இதில் ஏ.சி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருள்களுக்கான உதிரி பாகங்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (நவ. 10) காலை திடீரென குடோனில் தீப்பற்றத்தொடங்கியதால் அங்கிருந்த பணியாளர்கள் வெளியே ஓட்டம்பிடித்தனர். இதனையடுத்து அருகேவுள்ள தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மதுரவாயல், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், ஆவடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.